(Reading time: 11 - 21 minutes)

உங்க சந்துருவைத்தான். அவர் என்னை விரும்புவதாகவும் கல்யாணம் செய்துக்கிறதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் இருக்கிற தைரியத்தில் தான் உங்க அத்தை பேசுறாங்க அவரே மறுக்கும் போது அவங்க நிச்சயம் மனசு மாறிடுவாங்க சில கணங்கள் மெளனமாக இருந்த மாயா மேற்கொண்டு பேசினாங்க. 

போன மாசம் ஹோட்டல் சோழாவில் நடன நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெண் என்னைச் சந்திக்க வந்தாளே உனக்கு ஞாபகம் இருக்கா வினிதா ?

ஆமா மேடம் நல்லா நினைவு இருக்கு ?! இப்போ எதுக்காக மேடம் ?

பர்வதம்மா பண பைத்தியமின்னா சந்துரு பெண்பித்தன். அந்தபெண் சந்துருவினால் பாதிக்கப்பட்டவள், எங்கிட்டே வந்து நின்னா நான் என்ன செய்யமுடியும் சொல்லு, ஆளையும் அலட்டலையும் பார்த்து மயங்கிட்டு மோசம் போனபிறகு, அய்யோ அம்மான்னா வருமா ? பாவம் அவங்க ஆச்சாரமான குடும்பம் பெத்தவங்க என்னோட நிலைமை தெரிந்தா உயிரையே விட்டுடுவாங்கன்னு ஒரே அழுகை, ஒரு அந்நியனோட கல்யாணத்திற்கு முன்னாடி படுக்கை வரை போகத் தெரிந்தவளுக்கு அப்போ பெத்தவங்க உயிரோ கெளரவமோ தெரியலை பாரு, இதைப்பற்றி அத்தைகிட்டே சொல்லி அந்தப் பொண்ணையே சந்துருவுக்கு கட்டித் தரசொன்னா ஆம்பிளைன்னா அப்படியிப்படித்தான் இருப்பா நீ கட்டிக்கமாட்டான்னே சொன்னே இல்லை, அதனால் எம் பிள்ளை இப்படியாயிட்டான் ஒரே சண்டை. அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு தெரியலை அந்த பெண்ணை பார்க்கமுடியலை, அவ கொடுத்த போன் நம்பரும் இணைப்பில் இல்லைன்னு வந்தது. இதையெல்லாம் நான் உனக்கு சொல்ல காரணம் காதல் இனிமையானது, அது நம்மை வாழ வைக்கணும். வெறும் உடல் சுகத்திற்காக அலையும் சந்துரு மாதிரி ஆளுங்களுக்கு அதோட புனிதம் தெரியாது. 

நான் போனிலேயே அழுதேன் மாயா மேடம் விஷயத்தை சொன்னதும், என்னாலே ஏமாற்றத்தைக் கட்டுப்படுத்திக்க முடியலை, காதலிக்கிறேன்னு ஒப்புகிட்ட பிறகு, சந்துருவினால் ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயமா இருந்தது. அதற்கும் மாயா தீர்வு சொன்னாங்க. தான் கூடிய சீக்கிரமே கமல் சாரைக் கல்யாணம் செய்துக்கப்போறதாகவும், நடனத்தை விட்டு முழுமையா விலகிடப்போறதாகவும், கமல் ஸார் அலுவலகத்திலேயே எனக்கு வேலை போட்டுத் தருவதாகவும் சொன்னாங்க, நான் ஊரில் இருந்து வரும் வரையில் வீட்டுப்பக்கம் போகவேண்டான்னும் சொன்னாங்க. ஒரு நல்ல சகோதரியா என்னை நல்ல வழிப்படுத்தின அவங்களை நான் பிணமாத்தான் பார்த்தேன். மாயா மேடம் ரொம்பவும் உறுதி படைச்சவங்க ஸார். இத்தனை வருஷமா அட்டையா உறிஞ்சிகிட்டு இருந்தவங்க கூட வாழும் போதே இறக்கணுமின்னு நினைக்காதவங்க கமல் ஸாருடன் வாழணுமின்னு ஆசைப்பட்டப்பவா தற்கொலை செய்துப்பாங்க இதிலே ஏதோ தப்பு இருக்கு அந்தப் பாவிங்கதான் அவங்களை ஏதாவது பண்ணியிருப்பாங்க. வினிதா தன்னிலை மீறி அழத் துவங்கினாள். 

மாயா வருவாள்

Epsiode # 06

Epsiode # 08

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.