அதைச் சொல்லத்தான் நானும் சில நாட்களா முயற்சித்து வருகிறேன் கேட்கத்தான் ஆளில்லை, நல்லவேளை நீங்களே வந்திட்டீங்க ?! இவர் பெயர் கமல் கமல் இன்டர்ஸிஸ் ஒனர். நல்ல மனிதர் மாயாவின் கணவர் இவருக்கும் மாயாவுக்கும் திருமணம் ரிஜஸ்டர் செய்யப்பட்டு இருக்கு அதன்பிறகு மாயா அவரோட சொத்துக்களை எல்லாம் கமலின் பெயருக்கு மாற்றியெழுதியிருக்காங்க. மேலும்,
நோ....மாயாவிற்கு யாரும் காதலர்கள் கிடையாது. அவ என்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வதாய் பேசி ஏற்பாடு கூட நடந்தது.
அப்படின்னு நீங்க சொல்றீங்க? இவர் பத்திரங்கள் எல்லாம் ஆதாரப் பூர்வமா காட்டுறாரே? அதை எப்படி நம்பாமல் இருக்க முடியும். இதோ பாருங்க போட்டோஸ் எல்லாம் இருக்கு.
சார். மாஸ் கிராபிக்ஸில் போட்டோஸ் எடுப்பதெல்லாம் சர்வ சாதாரணம்.
நான் போலீஸ்ங்கிறதை அடிக்கடி மறந்துடுறீங்க மிஸ்டர் சந்துரு. எல்லாம் பக்காவா செக் பண்ணியாச்சு. மாயாவின் அத்தனை சொத்துக்களுக்கும் உரிமையாளர் மிஸ்டர் கமல் அவங்களுக்கு கல்யாணம் ஆனது மாயாவின் காரியதரிசி வினிதாவிற்கும் தெரியும். வினிதா உள்ளே வாங்க.
வினிதா மெதுவாய் நடந்து வந்தாள் அவள் கையில் இருந்த பத்திரங்களும் புகைப்படங்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவர்கள் மணமானவர்கள் என்று ஒப்புதல் தந்திட, பர்வதம்மாளும் சந்துருவும் திகைப்பாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
மாயாவோட வீடு இது இப்போ எனக்கு உரியானது. மாயாவின் தற்கொலை உண்மையில்லை அதுல எனக்கு சந்தேகம் இருக்கு, அதனால நான் இப்போ கேஸை ரீஒப்பன் செய்யப் போகிறேன் இன்ஸ்பெக்டர் இந்தக் கமல் மாயாவின் கணவனா சொல்றேன் என் மனைவியை கொன்னவங்களை நான் விடப்போவது இல்லை அதுவரையில இந்த வீட்டு லே யாரும் எங்கேயும் போகக் கூடாது. மாயா கேஸ் முடிந்தபிறகு நான் மற்றவற்றைச் சொல்கிறேன். இப்போ எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது இன்ஸ்பெக்டர் இவங்களையெல்லாம் நான் அப்பறமா பாக்கிறேன்.
ப்ளீஸ் ... லாயரும் இன்ஸ்பெக்டரின் ஆதரவோடு வினிதா நீங்கதான் இனிமே என்னோட காரியதரிசி என்னோட ரூம் மாயாவோடதுதான் அதை கிளீன் பண்ணிட்டு என்னைக் கூப்பிடுங்க.
மேற்கொண்டு பேச எதுவும் பேசமால் பர்வதம்மாவையும், சந்துருவையும் பார்த்துவிட்டு மாடியேறினான்
பர்வதம்மாள் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
மாயா வருவாள்
{kunena_discuss:1142}