Page 13 of 13
கண்ணீர்!
ஆம், கிழவனின் கண்களில் கண்ணீர்!.
கிழவி "கிழவா!" என்று கூப்பிட்டாள்.
கண்களில் நீர் பளபளத்த நிலையிலும் கிழவனின் முகத்தில் புன்சிரிப்பு. "கிழவி, என்ன சொல்றே?" என்று அவன் கேட்டான்.
"சாவு ரொம்ப அழகாயிருக்கு, கிழவா! சாவு ரொம்ப அழகு!"
கிழவன் சிரிக்கத் தொடங்கினான். அவனது கண்ணீர் டப் டப்பென்று கிழவியின் நெற்றியின் மேல் விழுந்தது. அவன் அதைத் துடைக்கப் போனான்.
"ஊஹூம், அது இருக்கட்டும்" என்றாள் கிழவி.
-----------------------------