கண்ணடித்து அவள் கேட்க, வழக்கம் போல் அவளிடம் மயங்கினான் கார்த்திக். ஆனாலும் அவன் மனமும் தெளிவாகி இருந்தது.
"சரிங்க பாட்டி, இப்போ நம்ம எதிர்காலத்த பத்தி கல்யாணத்த பத்தி எதுவுமே யோசிக்க வேண்டாம்.. முதல்ல இன்னைக்கு நாளை நல்லா என்ஜாய் பண்ணலாம் சரியா?"
"ம்ம்ம் இத தான் நானும் சொன்னேன்.. சரி டிரைவர் வண்டி எடு போலாம்"
"எல்லாம் என் நேரமடி ஏறு"
"ம்ம்ம்ம்"
மனதில் இருப்பதை எல்லாம் கவனமாய் மறைத்து யாருக்கும் காயம் தராத ஒரு வழியினை பிடித்துவிட்டாள் மயூரா. ஆனாலும் மனதின் அறைகளை அவளால் அவ்வளவு எழிதாக பூட்ட முடியவில்லை. விரைவில் அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு கார்த்திக் பேசுவதை கவனித்தாள்.
"மயூ அந்த புது பாட்டு கேட்டியா டி அது சூப்பர் ல, எனக்கு அந்த கடைசி தான் ரொம்ப பிடிச்சுது"
“எனக்கு ரொம்ப பிடிச்சது ஒரு வரி தாண்டா"
"எது டி"
ஒரு செயற்கை புன்னகையுடன் சொன்னாள் மயூரா
"எழுதா மொழிகள் எனது...!!"
இந்த கதை ஒரு உண்மை நிகழ்வை தழுவியது. இன்னமும் மயூராவும் கார்த்திக்கும் ரூபனும் அவரவர் நியாய தர்மங்களுக்கு ஏற்ப காதலை காதலித்து கொண்டும் நிராகரித்து கொண்டும் தான் இருக்கின்றனர். வரும் காலத்தில் எங்கேனும் அவர்களை சந்திக்க நேர்ந்தால் நிச்சயமாக இக்கதையின் முடிவை அவர்கள் வாழ்வின் தொடக்கத்தை கண்டறிந்து இன்னுமொரு கதையாக கொடுக்க மிகவும் விரும்புகிறேன். இந்த தலைப்புக்கும் போட்டிக்கும் சில்சீ-க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வெகு நாட்களை என் மனதின் அடியில் புதைந்த கிடந்த இந்த கதைக்கு வடிவம் கொடுக்க முடிந்ததில் நிம்மதி அடைகிறேன்.
என் சிறு கதையை எதிர் பார்த்து என்னை தொடர்பு கொண்டு பேசிய தோழிகளுக்கும், இங்கு கருத்து தெரிவித்த தோழிகளுக்கும் மிக்க மிக்க நன்றி. மிகவும் கடமை பட்டுள்ளேன். எத்தனையோ நாட்களுக்கு பிறகு மனதின் சுமைகளையும் பணி சுமைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு என் நிம்மதிக்காகவும் உங்கள் ஊகத்தினாலும் எழுதிய ஒரு சிறு கதை. படித்துவிட்டு கருத்துகளை பகிருங்கள். மீண்டும் நன்றி. :)
This is entry #62 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}