(Reading time: 10 - 20 minutes)

“…டைசில நான் இவ்ளோ நாள் துன்பப் பட்டதுக்கு அர்த்தமே இல்லாத மாதிரி இவன் வந்து இப்படி நிக்கறான்.. அவனை உயிரோட பார்த்தது எனக்கு சந்தோஷம் தான்..என்ன அவன் முன்னாடியே என் கிட்ட அட்லீஸ்ட் உண்மையை சொல்லியிருக்கலாம்.. சரணை அத்தை உயிரோடப் பார்த்தால் என்மேல இருக்கற கோபம் போய்ரும் இல்லை..?”என அவள் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் ரிஷியிடம் கொட்டினாள்.

ரிஷி அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டு இருந்தவன்.. திடீரென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.”மனசெல்லாம் வலிக்குது மதி.. நீ இவ்ளோ மனக்கஷ்ட்த்தை அஞ்சு வருஷம் அனுபவிச்சிருக்க.. சரண் மேல கோபம் தான் வருது.. உண்மையை சொல்ல தைரியம் இல்லாதவன் என்ன மனிதன்.. இவனால உங்க குடும்பத்துல எவ்ளோ குழப்பம்.. உங்க அத்தை உன்னை அவ்ளோ பேசியும் நீ அவங்களை வெறுக்கல.. உண்மையா நீ க்ரேட் டா..”என கூறி அவளை விடுவித்தான்..

“மே பி.. நீங்க என் லைஃப்ல வரனும்னு தான் இவ்ளோ நடந்துச்சோ என்னவோ.. இப்போ எனக்கு எவ்விதமான மனக்கஷ்டமும் இல்லை.. ஆனால் உங்களை காக்க வெச்சதுக்கு என்னை மன்னிச்சுருங்க..”என வருந்தினாள்..

“ச்சே ச்சே ஏன் டா பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற.. எனக்கு முன்னாடியே உன்னுடைய மனநிலை இப்படி தான் இருக்கும்னு ஓரளவுக்கு தெரியும்.. கணேஷ் மாமா எல்லாமே சொல்லியிருக்காங்க.. இப்போ சரண் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சு நீ சீக்கிரம் மனசு தெளிஞ்சுட்ட.. அப்பிடியே இல்லைனாலும் நான் கண்டிப்பா நீ முழு மனசோட ஒத்துக்கற வரைக்கும் காத்துட்டிருந்திருபேன்..”என மென்புன்னகையுடன் கூறினான்.

அவனையே கண்களில் நேசம் வழியப் பார்த்தவள்..அவன் தோள்களில் சாய்ந்துக் கொண்டாள்.அவள் மனம் என்றும் இல்லாத வகையில் பாரங்கள் நீங்கி நிர்மலமாக இருந்தது..அவள் சேர வேண்டிய இடத்தை சென்றடைந்துவிட்டாள் என அவள் உள் மனம் கூக்குரலிட்டது.

ரிஷி அவனது மதிப் பெண்ணை தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டு’உன்னை இனி எதற்க்கும் கலங்க விட மட்டேன் கண்ணம்மா’ என மனதோடு உறுதி எடுத்தான்.

This is entry #08 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - ஆர்த்தி N

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.