(Reading time: 18 - 35 minutes)

ந்த நிகழ்வின் மூலம் தன்னவள் தன்னை சீக்கிரம் உணர்ந்துகொள்வாள் என்று பாலா நினைக்க,மதுவோ அவள் மனம் உணர்ந்து சீக்கிரம் அவனிடமிருந்து  பிரிய நினைத்தாள்.

அதற்காக அவள் பல வழிகளில்இரண்டு மாதங்களாக முயன்றும் முடியாமல் போகவே அடுத்து அவள் தன்னையே துன்புரித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

அன்றும் அவள் டிவர்ஸ் பற்றி பேச வழக்கம்போல அவனும் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

“பா..பா..பா...பாலா நான் கேட்டத தர மாட்டிங்கள..,இ..இ...இ.இப்ப நீங்களே ஒத்துகுவிங்க பாருங்க..”என்றுக் கூறி கொண்டே சமையலறை நோக்கி சென்றவள்.

கரண்டியை சூடாக்கி தனது உள்ளங்கையில் சூடு வைத்துக்கொண்டாள்.

அதை கண்டவனின் உயிரே போய்விட கடைசியாக அவன் சம்மதித்தான்.

முதல் திருமண நாள் அன்று அவன் பரிசாக தருகிறேன் என்றுக்கூறி அவளை  அமைதிபடுத்தினான்.

மேலும் ஒரு மாதம் சென்றிருக்க அவன் ஒரு அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிங்கபூர் வரை செல்லவேண்டி இருக்க,தனது தம்பி பிரபாவை அவளுக்கு துணையாக இருக்க வைத்துவிட்டு சென்றுவிட்டான். பிரபாவும்,மதுவும் நல்ல நண்பர்கள்.அவளிடம் பேசாமல் ஒரு நாள் இருக்க மாட்டான்.அந்நாளில் நடந்தது அத்தனையும் கூறாமல் அவன் மொபைலை வைக்க மாட்டான்.அதுபோலதான்,அவன் அன்னையும் அவர்களை பொருத்தவரை மது ,அவர்களின் மகள் இல்லா  குறையை தீர்க்க வந்தவள்.இப்படி பாலாவின் குடும்பமே அவளது அன்புக்கு அடிமை.   

பிரபாவிற்கு இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்தது. ஏனென்றால் எப்பொதும் அவனை கிண்டல் செய்தே கொல்பவள்,இப்போது எல்லாம் அவ்வளவுக்கு பேசுவதில்லை. ஆனால் அவன் அது சரியாகிவிடும் என்று நினைத்தான்.

பாலா சென்ற அடுத்த நாள்  பிரபாவும்,மதுவும் டிவி பார்த்துக்கொண்டிருந்த சேனலில் பாலாவின் இண்டர்விவ் ஒன்று ஒலி பரப்பாகியது.இருவரும் அதை பார்த்தனர்.

முதலில் அவனது படிப்பு,இளமைகாலம் என்றுக் கேட்டுகொண்டிருந்த தொகுப்பாளினி கடைசியாக அவனது திருமணம் பற்றிக் கேட்க ஆரம்பித்தார்.

“ பாலா சார்,உங்க மேரேஜ் அரேண்ஜ்டா இல்ல லவ் மேரேஜா..”என்று தொகுப்பாளினி கேட்க

“லவ் மேரேஜ் தான் ..,பப்பி லவ்...”என்றுக் கூறி அதைபற்றி சொல்லவும் ஆரம்பித்தான்.

துவும்,பாலாவும் நெய்பர்ஸ் தான்.பாலாவிற்கு ஐந்து வயது இருந்தபொழுது தான் மதுவும்,பிரபாவும் பிறந்தனர்.

ஆரம்பத்திலிருந்தே பாலா, மது வீட்டில் வளர்ந்ததாலோ  என்னவோ தெரியவில்லை, மது பிறந்தபொழுது அவளிடம் அவனுக்கு தனிபிரியம்  வந்துவிட்டது.

அவனை பொருத்தவரை அவள் அவனது டால்,தேவதை.

அவள் அவளுக்கே தெரியாமல் அவனை பல நேரங்களில் தேற்றியுள்ளால்.

அவன் சிறு வயதிலேயே நன்கு பாடுவான்.ஒரு முறை பாகவதர் நிகழ்ச்சி டிவியில் ஓட அவரை மது யாரென்று அவள் அம்மாவிடம் கேட்க, அவரும்  அவரது பெயரை சொல்ல, பாடுபவர்களுக்கு எல்லாம் அந்த பெயரென்று நினைத்து அவனை அவ்வாறே கூப்பிட ஆரம்பித்து விட்டாள்.

ஒரு முறை அவன் நன்றாக பாடாமல் மனது கஷ்டபட்டு இருந்தபொழுது நான்கு வயது நிரம்பிய மது, பாகவதர் நீ இனிமே என்ன நினைச்சிகிட்டு பாடு,நீ நல்லா ஜெய்ச்சிடுவ என்று அவள் விளையாட்டாக தனது மழலை குரலில் கூறி இருந்தாலும்

அன்று முதல் அவளையே நினைத்து பாடுகிறான்.அதற்கு பிறகு அவன் தனது கேர்ரியர்காக அவளை விட்டு பிரிந்து வந்தாலும் அவனால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவனை பல பெண்கள் கடந்து சென்ற போதிலும்,அவளை பார்த்து பத்து வருடங்கள் ஆகியபோதும், அவனால் அவளை மறக்க முடியவில்லை.

அதுதான் அவனின் காதல் கதை என்று அவன் கூறி முடிக்க, அதை கேட்டுக்கொண்டிருந்தவளுக்கோ மனதில் மிகப்பெரிய அடி வாங்கியது போல் இருந்தது.

தன்னவன் தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்டுள்ளான்,அதுவும் சிறு வயது முதலே,அவனது கண்களுக்கு தனது குறை பெரிதாக தெரியவில்லை என்ற எண்ணமே அவளை முழுவதாக  சந்தோஷத்தில் ஆழ்த்தியது.அதை அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் எடுத்துரைத்தது. தொகுப்பாளினி அவனிடம் அடுத்த கேள்வியை கேட்டாள்.

“ சார், நீங்க உங்க பெயர  மதுபாலானு மாத்திக்கிட்டிங்க..,ஏன் சார்...”

“என்னோட மனைவி பெயரு மது, எப்படி ராதாகிருஷ்ணன்,சீதாராமனு சொல்லுறாங்களோ ,அதே மாதிரி நானும் மதுபாலாவா மதுவோட பாலாவா இருக்கனும்...”என்று அவன் முடிக்க அதை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணவளின் மனமோ சொல்ல முடியாத உணர்வுகளில் உழன்று கொண்டிருந்தது.

“உங்கள்  மனைவிக்கு என்று எந்த பாடல் பாடுவீங்க...”என்று தொகுப்பாளினி

கேட்க,பாட ஆரம்பித்தான் பாலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.