எதுவும் பேசாமல் வெளியே வந்தான் ரிஷி.
நந்தினி அங்கே தூரத்தில் இருந்த ஒரு சேரில் அமர்ந்திருந்தாள். அவளை நோக்கி செல்கையில் பாதியில் வந்தாள் வெண்ணிலா
”ஹாய் ரிஷி” என கிறக்கமாக அழைக்க அவனுக்கு கடுப்பாக இருந்தது. ரிஷியை கண்டதும் தன் சீட்டில் இருந்து எழுந்த நந்தினி அவனிடம் வர ஆரம்பித்தாள்.
”வழியை விடு” என வெண்ணிலாவிடம் கூற அவள் வேண்டுமென்றே அவனின் அருகில் வந்தாள்
”என்ன ரிஷி எப்ப பார்த்தாலும் கோபப்படற ஒரு முறையாவது ஆசையா பேசலாம்ல” என அவள் கூறும் போதே நந்தினி வந்து சேர்ந்தாள். வந்தவள் ரிஷியிடம்
”அத்தான் போலாமா” என கூப்பிடவும் வெண்ணிலா நந்தினியை முறைத்து பார்த்தாள். இருபெண்களுக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை.
”ரிஷி யார் இந்த பொண்ணு” என கோபமாக கேட்க நந்தினியும் ரிஷியிடம்
”அத்தான் இவங்க யாரு” என அமைதியாக கேட்க ரிஷி இரு பெண்களையும் மாறி மாறி பார்த்துவிட்டு
”வெண்ணிலா வழி விடு நாங்க போகனும்”
”இவள் யார்னு சொல்லாம நீ போக கூடாது” என வெண்ணிலா கத்த
”எனக்கு கட்டளை போட உனக்கு உரிமையில்லை” என ரிஷியும் பதிலுக்கு கத்தவும் ரூமிலிருந்த கௌதம் சத்தம் கேட்டு வெளியே வந்தான். வந்தவனுக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என சொல்லாமலே புரிந்துவிட அவன் நேராக வெண்ணிலாவிடம் வந்தான்