(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

என்ன மணி 9” என்றான் அர்ஜூன்

  

ராத்திரி ஆயிடுச்சி

  

அதனாலென்ன

  

இந்த ராத்திரி நேரத்தில கூட்டிட்டு போக வேணாம் விடிஞ்சதும் கூட்டிட்டு போ

  

அண்ணா புரிஞ்சிதான் பேசறீங்களா, அவள் வயசுபொண்ணு, நம்ம கூட ஒரு நாள் நைட் இருந்தா ஊர் உலகம் தப்பா பேசாதா” என சொல்லியவன் நந்தினியை பார்த்து

  

”ஏம்மா நந்தினி கிளம்பு லேட் ஆனாலும் பரவாயில்லை, உன்னை உன் மாமா வீட்ல விட்டாதான் உனக்கு நல்லபேர், இங்க இருந்தா உனக்கு கெட்ட பேர் வந்துடும் கிளம்பு” என அவன் சொல்லவும் அவள் ரிஷியை பார்க்க அவன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான். அவனிடம் சென்றவள்

  

அத்தான் அண்ணா சொல்றது சரிதான் நான் கிளம்பறேன் ரொம்ப நன்றிஎன சொல்லிவிட்டு ஹாலில் இருந்த தன் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அர்ஜூனும் அவளிடமிருந்த லக்கேஜ்களை வாங்கிக்கொண்டு அவளோடு சேர்ந்து வெளியே சென்றான்.

  

அவள் செல்வதை பார்த்த ரிஷிக்கு கோபம் தலைக்கேறியது, அவனால் அவள் தன்னை விட்டு செல்வதை தாங்கிக் கொள்ள முடியவில்லை, வேண்டுமென்றே வெளியே சென்றான். அதற்குள் அவர்கள் புறப்பட்டுவிட அவனும் தன் ஜீப்பில் பின் தொடர்ந்தான்.

  

காரில் சென்றதால் அர்ஜூன் அவ்வளவாக எதுவும் பேசாமல் சீக்கிரமாகவே ராஜகோபாலின் வீட்டிற்கு சென்றுவிட்டான். உள்ளே அவளை அழைத்துக்கொண்டு சென்றவன் அங்கு சோபாவில் அமர்ந்திருந்த ராஜகோபாலிடம் விபரம் கூற அவர் அவளை திட்ட ஆரம்பித்தார்.

  

உன் சகவாசம் வேணாம்னுதானே உன்னை கையோட கூட்டிட்டு வராம வந்தேன், அப்பவே உனக்கு புரிஞ்சிருக்கனும். என் தங்கச்சியும், தங்கச்சி புருஷனும் செத்ததுமே எல்லாமே

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.