”ஹாய் வெண்ணிலா எப்படியிருக்க”
”நான் இருக்கறது முக்கியமில்லை இவள் யார் அதான் முக்கியம்”
”எதுக்கு கோபப்படற பொறுமையா கேளு இவள் பேரு நந்தினி”
”சே பேர பாரு நல்லாவேயில்லை” என அவள் சொல்லவும் நந்தினி முகம் வாடிவிட்டது
அதைபார்த்த இரு ஆண்களும் வெண்ணிலாவிடம்
”போதும் நிறுத்து வெண்ணிலா” என ரிஷி கத்த
”தேவையில்லாம அடுத்தவங்களை இன்சல்ட் பண்ணாத, பேருக்கென்ன குறைச்சல் அவளுக்கு ஏத்த மாதிரி அழகாதான் இருக்கு” என கௌதம் பேச ரிஷி கௌதமை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு நந்தினியின் கையை பற்றி இழுத்துக்கொண்டு காருக்கு சென்று காருக்குள் அவளை அமர வைத்துவிட்டு தானும் டிரைவர் இருக்கையில் அமர்ந்து அதை வேகமாக ஓட்டலானான்.
அவன் எதுவும் பேசாததால் அவளும் எதுவும் பேசாமலே வந்தாள். வீட்டை அடைந்ததும் உள்ளே வந்தவர்கள் அர்ஜூன் இருப்பதை பார்த்து என்ன என்பது போல் சைகை செய்தான் ரிஷி
”என்னவா ராஜகோபால் யார்னு கண்டுபிடிச்சிட்டேன்” என சொல்லிய அர்ஜூன் அவளிடம்
”சரி கிளம்பு உன்னை கொண்டு போய் உன் மாமா வீட்ல விட்டுடறேன்”
”இரு இப்ப மணி என்ன” என்றான் ரிஷி