தாத்தா சொன்னதை நினைத்து பயந்த ரிஷிகேசன் அவசரமாக நந்தினியை காண துடித்தான். அதற்கு குறுக்கே இருக்கும் அர்ஜூனை எப்படி நகர்த்துவது என தெரியாமல் விழித்தான். இருந்தாலும் அவனை வைத்தே அவளை சந்திக்க நினைத்தவன் அவசரமாக அர்ஜூனுக்கு போன் செய்தான்
”ஹலோ”
“எங்கடா இருக்க”
“நான் கம்பெனியில வேலையா இருக்கேன்”
”சரி அங்கயே இரு நீயும் நானும் நந்தினியை பார்க்கப்போறோம்”
“எதுக்கு”
“அவள்ட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்”
“என்ன விசயம் சொல்லுங்க நானே சொல்லிடறேன்”
“உன் கழுத்தை நெறிச்சி கொன்னுடுவேன் பார்த்துக்க அதான் சொல்றேன்ல முக்கியமான விசயம்னு புரியலையா உனக்கு”
“சரிண்ணா ஆனாலும் அவளை பார்க்க நைட் 7 மணிக்குதான் போகனும் இப்ப எப்படி போறது”
“சரி அவள் போன் நெம்பர் கொடு”
“முடியாதுண்ணா”
”சரி அவளை வெளிய வரசொல்லு நான் அவளை அவசரமா பார்க்கனும்”