”அந்த பொண்ணு பேரு என்ன”
“நந்தினி”
“அர்ஜூனோட தங்கச்சி தானே”
“ஆமாம்”
“ம் பார்க்க எப்படியிருப்பா”
“உங்க காதலி மாதிரியிருப்பா” என அவன் சொல்ல தாத்தாவிற்கு சிரிப்பே வந்து சிரித்தார்
”நான் கூட மறந்துட்டேன் நீ இன்னுமா ஞாபகம் வைச்சிருக்க”
“என்ன செய்றது அதுக்காக உங்களை மாதிரி என்னால இருக்க முடியாது”
“என்னை மாதிரியா ஏன் எனக்கென்ன ஆச்சி”
“ஆமாம் ஒரு பொண்ணை காதலிச்சிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படித்தான் உங்களால வாழமுடியுதோ”
“நான் எங்கடா வாழ்ந்தேன். என் அப்பா என்னை புரிஞ்சிக்கலை கட்டாயமா என்னை உன் பாட்டி தலையில கட்டிவைச்சாரு. அவளும் வந்த நாள்ல இருந்து அவளோட தொல்லை தாங்க முடியலை. சரியான திமிரு பிடிச்சவ எல்லாரையும் அடிமையாக்கனும்னு எண்ணம் கொண்டவ யாரும் அவளை கல்யாணம் பண்ண முன்வரலை என்னை பிடிச்சி தள்ளிட்டாரு. இல்லைன்னா நான் காதலிச்ச பொண்ணையே நான் கல்யாணம் செஞ்சிருப்பேன்” என தன் நினைவுகளை சொல்லி நொந்து போன தாத்தாவை ஏக்கமாக பார்த்தான் ரிஷி. அவனின் பார்வையை பார்த்து