ரிஷியால் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் அலைபாய்ந்தவன் சட்டென தாத்தா கார் டிரைவருக்கு போன் செய்தான்
”ஹலோ”
“நான் ரிஷி பேசறேன்”
“சொல்லுங்க சார்”
“இங்கபாரு கவனமா கேளு பின்னாடி தாத்தா மட்டும்தானே இருக்காரு”
“ஆமாம் சார்”
“அப்ப சரி வண்டியை திருப்பி வீட்டுக்கு வா”
“ஆனா சார்”
“சொன்னதை செய் இப்ப நீ தாத்தாவை கூட்டிட்டு வீட்டுக்கு வரலை உன்னை நான் கொன்னுடுவேன்” என சொல்ல அவனும் சரியென்றான்.
போனை வைத்தவன் ரெடியாக வீட்டை விட்டு வெளியேறி கேட்டிடம் நின்றுக்கொண்டான்.
கார் டிரைவரும் ரிஷிக்கு பயந்து காரை வீட்டிற்கே கொண்டு வந்துவிட தாத்தாவிற்கு எல்லையில்லா கோபம் வந்து டிரைவரை திட்ட அவன்
”ஐயா என்னை மன்னிச்சிடுங்க ரிஷி தம்பி போன் பண்ணி கொன்னுடுவேன்னு மிரட்டினாரு அதான்” என சொல்ல தாத்தாவும் கோபமாக காரைவிட்டு வெளியே வந்தார்.
அவருக்காக காத்திருந்த ரிஷியும் அவரிடம் வந்து நின்றான்