Page 2 of 29
“நான் பார்த்திருக்கேன் அவளை பத்தி எனக்கு தெரியும் அதனாலதான் சொல்றேன்”
என ரிஷி சொல்லவும் தாத்தாவிற்கு சிரிப்பே வந்தது
”எதுக்கு சிரிக்கிறீங்க தாத்தா” என கோபமாக கேட்டவனிடம்
”இல்லைடா பொண்ணுங்கன்னா அப்படித்தான் வெளிப்படையா பேச மாட்டாங்க உள்ளுக்குள்ள இருக்கும் நான் அவள்ட்ட பேசி மனசை மாத்தறேன்” என சொல்ல ரிஷி தன் தாத்தாவிடமே எதிர்த்து நின்றான்
”தாத்தா” என கத்த அவர் சாதாரணமாக அவனை ஒதுக்கினார்
”நான் இப்ப நேரா அவளை பார்த்துட்டு அப்புறமாவே மாப்பிள்ளை வீட்டுக்கு போறேன்” என சொல்லவும் ரிஷியும்
”நானும் வரேன்”
“வேணாம்”
“இல்லை நானும் வருவேன்”
“முடியாது”
“நான் கண்டிப்பா வருவேன்”
”உன்னை நான் ஏன் கூட்டிட்டு போகனும்”
“நான் வந்துதான் தீருவேன் இருங்க 5 நிமிஷத்தில வந்துடறேன்”