(Reading time: 24 - 47 minutes)

 

" ஹே ஜானு "

" ம்ம்ம்ம் "

" சீக்கிரம் வந்திடுறேன் ....அழாதே  டா"

" அதுவரைக்கும் நான் என்ன பண்ணுவேன் ? "

" ஹேய் லூசு ..நான் என்ன நாளைக்கேவா கெளம்பறேன் ? இன்னும் மூணு நாள் இங்கதானே  இருப்பேன் .... . அதுவும் மாமா கூடதானே இருக்க நீ ? அப்பறம் என்னடா ? ரெண்டு நாள்ல என்ன ஆகிடப்போது சொல்லு "

" என்னமோ போங்க .... எல்லாத்துக்கும் ஒரு பதில் "

" ஹா ஹா ஹா "

" சிரிச்சே மயக்கிடுவிங்களே  ! "

" ம்ம்ம்கூம்ம்ம் நானாவது சிரிச்சுதான் மயக்கினேன் ...நீதான் பார்த்தே மயக்குறியே டி .... "

" இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.... நாளைக்கு வீட்டுக்கு வரிங்க தானே.... ? "

நாளைக்கு என்றதும் அவன் முகத்தில் ஒரு கள்ள சிரிப்பு வந்தது ...நேரில் இருந்திருந்தால் ஜானகி அதை கண்டுகொண்டிருபலோ என்னவோ ? நாளை நடக்கபோகும் களேபரம் தெரியாமல் தன் மனம் கவர்ந்தவனிடம் உரையாடிவிட்டு  உறங்கினாள்...

றுநாள் ,

" ஜானகி "

" என்னப்பா ...."

" இந்த புது புதவை கட்டிகிட்டு வா மா ..உன்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க "

" யாரு வராங்கப்பா ? "

" பானுவும் அர்ஜுனும் "

" அப்பா ............! "

" நீ சீக்கிரம் ரெடி ஆகு மா ...எனக்கு நிறைய வேலை இருக்கு " என்று பேச்சை தொடராமல் அவர் சென்று விட , தனதறைக்கு சென்ற ஜானகி உடனே அர்ஜுனனை அழைத்தாள்...

" மாமா "

" ஹேய் அத்தை பொண்ணு .... மாமனை பார்க்கம இருக்க முடியலையா டீ ? இன்னும் 10 நிமிஷத்துல அங்கே இருப்பேன் "

( 10 நிமிஷமா ? அப்போ அப்பா சொன்னது உண்மைதானா? கடவுளே என்ன சோதனை இது? ) என்று எண்ணி அவள் பதில் சொல்வதற்குள் எதிர்முனையில் போன அணைக்கபட்டுவிட்டது....

அதற்குள் உள்ளே வந்த சண்முகம்,

" என்னடா ? டிரஸ் மாத்தலையா ? சரி விடு  உன் அத்தை என்ன உன்னை முதல் தடவையா பார்க்க போறாங்க ? ....அடடே வந்துட்டாங்க போல .... " என்றபடி வாசல் நோக்கி ஓடினார் ....

வந்தவர்களை வரவேற்கும் எண்ணம் கூட இல்லாமல் தன் தாயின் புகைப்படம் முன் நின்று கண் மூடி மானசீகமாக பேசினாள்  ஜானகி ...

( அம்மா .... இப்போ நான் என்ன செய்வேன்? என் மனசுல ஸ்ரீராம் அத்தான் தான் இருக்காங்கனு நான் அப்பாகிட்ட எப்படி சொல்லுவேன் ..... ஒரு வேளை  நீ உயிரோடு இருந்திருந்தா உன்கிட்ட சொல்லி இருப்பேன்ல ? ) அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அர்ஜுனனின் குரல் மிக அருகில் கேட்டது..... இருப்பினும் கண்களை திறந்து அவனை பார்க்க விரும்பாமல் கண் மூடியே அவள் நிற்க,

" ஹே வாயாடி இப்படி கண்ணை மூடிகிட்டு நின்னா? என் அண்ணாவை உனக்கு கட்டி வைக்க மாடோம்னு நெனைச்சியா  " என்றான் அர்ஜுன் ...

அவன் சொன்னதை கேட்டு திடுகிட்டு  விழி திறந்தவள் முன் அர்ஜுனனும் ஸ்ரீராமும்  நின்றிருந்தனர்....

" ராம் " என்றபடி அனைவரின் முன்னிலையும் அவனை கட்டிக்கொண்டு அழுதாள் ஜானகி ....

" உயிரே போச்சு ராம் ...இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டா? இது கண்டிப்பா இந்த அர்ஜுன் மாமா வேலையத்தான் இருக்கும்.... அவர்தான் சொன்னா நீங்களும் இப்படி செய்யலாமா? " என்று குறைபட்டு கொண்டவள் கோபத்துடன் தனதறைக்கு ஓடினாள்.....

அதுவரை சிரித்து கொண்டிருந்த அர்ஜுன், " டேய் அண்ணா  போய் உன் டார்லிங்கை சமாதனப்படுத்து..... முடிஞ்சா கால்ல விழுந்துடு" என்றான் ....

 ஜானகியின் அறையில் ,

" சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடீ!

ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!

சாத்திர முண்டோ டீ!

மூத்தவர் சம்ம தியில்-வதுவை

முறைகள் பின்பு செய்வோம்;

காத்திருப் பேனோ டீ?-இது பார்.

கன்னத்து முத்த மொன்று! " என்று ஸ்ரீராம் பாட மீண்டும் அவனை அணைத்துக்கொண்டு அழுதாள் ஜானகி...

" ஹே கண்ணம்மா .... இங்க பாரேன் ..... ஹே என்னடா ? "

" என்ன இதெல்லாம் ராம் ? நான் மட்டும் கொஞ்சம் அவசர பட்டிருந்தா ? "

" என்ன பன்னிருப்பிங்க மேடம் ? கல்யாணம் வேணாம்னு கூச்சல் போட்டு இருப்பிங்களா? "

" செத்துருப்பேன் "

" ஹேய் !!!!! "

" நிஜம்மா ராம் .... நீங்க  இல்லன்னா கண்டிப்பா செத்துருப்பேன்.... அப்பாவை எதிர்த்து நிற்க முடியாம செத்துருப்பேன் "

" பேசி முடிச்சிட்டியா? இல்ல இன்னும் இருக்கா ? ஏற்கனவே அம்மா அப்பாவை இழந்துட்டேன்... இப்போ நீயும் சாக போறியா ? "

" ராம் "

" பேசாதேடி !..... நான் வாழணும்னு ஆசை படுறேண்டி .... 100 வர்ஷம் சந்தோஷமா உன் கூட வாழணும்னு இருக்கேன் ... செத்தாலும் உன் கைய பிடிசுகிட்டு செத்துறனும்னு இருக்கேன் ... நீ என்னடான்னா? ஒரு நிச்சயத்துக்கே இப்படி சொல்லலாமா ? "

" என்னை மன்னிச்சிருங்க ராம் .. உங்களை கஸ்டபடுத்த  அப்படி சொல்லல... அர்ஜுன் மாமா எனக்கு அண்ணா மாதிரி அப்படித்தானே அவரை நான் நெனைச்சிருக்கேன் ... திடீர்னு அவர்தான் மாப்பிளைன்னு  அப்பா சொன்னதும் பயந்துட்டேன் "

" உடனே எனக்கு கால் பண்ணிருக்கலாமே ? ஏன் பண்ணல ? "

" அந்த அளவுக்கு யோசிக்க முடில  ராம்...."

" அடபோடி என்னத்தை தான் யோசிச்சே நீ ? உன்னை பார்த்த முதல் நாள்லேயே நான் முடிவு பண்ணிட்டேன் நீதான் என் பொண்டாட்டின்னு .... "

" நிஜம்மாவா? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.