(Reading time: 21 - 42 minutes)

" நாங்க இன்னொரு நாளைக்கு வீட்டுக்கு வரோமே ? டக்குனு எப்படி வர்றதுன்னு தெரில..... நான் மாட்டும்னா நோ ப்ராப்ளம்...பட் அம்மா ஜானு... கொஞ்சம்  ..ஸ்டார்டிங் ட்ரபல் ... "

" ஹ்ம்ம் புரியுது டா..... அதை பத்தி சொல்லத்தான் கால் பண்ணேன்.... நாளைக்கு நாங்க எல்லாரும்  ஷாப்பிங் போறோம் ... ஷாப்பிங் முடிச்சுட்டு லஞ்ச் வெளியதான் .... பேசாம நாமே அங்கே மீட் பண்ணா என்ன? "

" பேசாம  எதுக்கு கிருஷ்ணா ? பேசிகிட்டே மீட் பண்ணலாமே ? "

" யப்பா உன் மொக்கை தாங்கலேடா சாமி .... பாவம் என் தங்கச்சி .... நான் நாளைக்கு எங்க போறோம்னு உனக்கு நியூஸ் தரேன் ..இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் பிரேக் கொடு "

" ஹஹஹ சரி சரி பொழைச்சு போங்க ...குட் நைட் "

ங்க இவங்க நாளைக்கு பத்தி பேசுற நேரம், நம்ம ஜானுவுக்கு தூக்கமே வரல...ஜானுவே தூங்கலேன்னா நம்ம ரகுவை பத்தி சொல்லவா வேணும் ... அப்படி என்னாதான் ரெண்டு பெரும் மனசுக்குள்ள பேசிகிட்டங்கன்னு பார்ப்போம் ....

ஜானகி : நான் இப்போ என்ன பெரிய  தப்பு பண்ணேன்?

ரகு : ஜானு அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டா ?

ஜானகி : இப்படியா முகத்தை திருப்பிகிட்டு போறது ?

ரகு : இப்படியா சிங்கத்தை கண்ட மான் மாதிரி நடுங்குறது ( நடவுல யாரோ தன்னை தானே சிங்கம்னு சொல்லிக்கிற மாதிரி இருக்கே....)

ஜானகி : சாரி கேட்டு இருந்திருக்கலாமோ ? பேசி இருக்கணுமோ ?

ரகு : எல்லாரும் பேசிகிட்டு இருக்கும்போது என்னை பார்த்ததும் மட்டும் பழைய அஞ்சு காசு மூஞ்சிய காட்டுனா என்ன பண்றது ?

ஜானகி  : இதுக்கு  முற்றுபுள்ளி வைக்கணும் ...

ரகு : இனியாவது பேச ஆரம்பிக்கணும் !

ஜானகி : கால் பண்ணி பாத்தாதான் என்ன ?

ரகு : அச்சோ போன் நம்பர் இல்லையே !

ஜானகி : சரி ஓகே !!!!

ஜனவரி நிலவே நலம்தானா? ஜனகனின் மகளே சுகம்தானா ? ( ரிங் டோன் மாத்திட்டராம் நம்ம ஹீரோ ... ரொம்ப உஷார் தான் )

" ஹெலோ ரகுராம் ஹியர் "

" ஹெ....ஹெலோ ...நான் ஜானகி பேசுறேன் "

( ஜா ...ன...கி ... யா .....என்ன நாம பேசுறதை ஒட்டு கேட்டுடாலோ ? )

" ஹெலோ இருக்கிங்களா ? "

" ம்ம்ம் "

" ஐ எம் சாரி "

" இட்ஸ் ஓகே "

" எதுக்குன்னு கேக்க மாட்டிங்கள"

" எனக்கு தெரிஞ்சு நீ பண்ணது ஒரே ஒரு தப்புதான் ! அதை நான் மன்னிச்சுட்டேன்  " (என்ன உங்களுக்கு கால் பண்ணதா சார் )

" என்ன தப்பு ? "

" என்னை மனுஷனா பார்க்கம  புலி சிங்கம் கிட்டே பேசுற மாதிரி நடுங்குறது "

" நீங்க கூடத்தான் ஏதோ வேண்டாதவங்களை பார்க்குற மாதிரி பார்த்து வெச்சிங்க  "

" பாருடா நீ பதிலுக்கு பதில் கூட பேசுவியா ? "

" அது ..........சுபி கிட்டே பேசற மாதிரி .... ஐ எம் சாரி "

"  நீ  என்ன குஷி பட ஜோதிகாவா ? "

" இல்ல ...வந்து ...சாரி"

" ஆண்டவா ..... ஓகே ஜானகி ....நான் சொல்றதை பொறுமையா கேட்குறியா? "

" ம்ம்ம்ம்ம் "

" நம்ம முதல் முதல்ல சந்திச்ச விதம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்துச்சு தான் ...ஆனா உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்ல ...பொதுவா எனக்கு சீக்கிரம் கோபம் வராது....சுப சொல்லி இருப்பாளே ! "

" ம்ம்ம்ம் "

" குட் இப்படித்தான் அப்பப்போ மண்டைய மண்டைய ஆட்டனும்    இல்லன்னா நான் தனியா பேசுறேனொன்னு எனக்கே டவுட் வந்துடும் "

" லைட்டா சிரிக்கிறே தெரியுது அதையும் கொஞ்சம் ஜாஸ்தியா சிரிக்கலாம் ... ஐ  டோன்ட் மைண்ட் "

"  ஹி ஹீ போதுமா "

" நல்ல பொண்ணு  இப்படிதான் இருக்கணும் ... சோ அவ்வளோதான் ... உன் மேல எனக்கு கோபம் இல்ல. .பரம்பரை பகையும் இல்ல .... நான் உன்னை என் தோழியா ஏத்துகிட்ட மாதிரி நீயும் என்னை நண்பனா ஏத்துக்கனும்னு அவசியமும் இல்ல ... ஏன்னா நான் ஆல்ரெடி உனக்கு நண்பனா கமிட் ஆகிட்டேன்.... இனி  அந்த பழைய  அஞ்சு காசு லுக் லாம் விட கூடாது .... அண்ட் நீயும் நானும்  எதிர்காலத்துல நிறைய  ப்ரோஜெக்ட்ஸ் சேர்ந்து செய்யுற வேலையும் வரலாம் இப்போவே சொல்லிட்டேன் "

" ப்ரொஜெக்டா? "

" ஆமா ... சுபியும் அர்ஜுனும் விரும்புறாங்களே....நாளைக்கே அவங்களை சேர்த்து வைக்க எனக்கு உன் உதவி தேவை படலாம்ல அதான் இப்போவே கால் ஷீட் வாங்கிட்டேன் "

" ப்ப்ப்பா...எப்படி பட்டாசு மாதிரி வெடிக்கிரிங்க ? சுபி சொன்னது உண்மைதான்...  "

"என்ன "

" நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுன்னு "

" என் தங்கச்சியா அப்படி சொன்னது ? " (சிவாஜி சார் ஸ்டைல் லே சொன்னாரு )

" ஐ  மீன்  நீங்க  ரெண்டு பெரும் வானரம் ஆயிரமாமே  !"

" ம்ம்ம்ம்கும்ம் அப்போவே சந்தேகப்பட்டேன்  இந்த பிசாசுகுட்டி நம்மளை பத்தி நல்லதா சொல்லாதேன்னு... சரி நீ வாட்ஸ் அப்  ல இருக்கியா? "

" ஆமா ஏன் ? "

" ஓகே தினமும் ஒரு சாங் அனுப்புறேன் கேளு ...இது என்னோட பழக்கம் ... என் பெஸ்ட் பிரண்ட்ஸ் கு அனுப்புவேன் டெய்லி "

" அர்ஜுன் என்னை பத்தி சொன்னதுனாலே தானே இப்படிலாம் பேசுறிங்க? "

" அர்ஜுனா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.