(Reading time: 19 - 37 minutes)

" நான் என்னை நம்புறத விட , நீதான்டீ அதிகமா என்னை நம்புற .. அதுக்காகவே உன்னை சந்தோஷமா வெச்சிப்பென் .. இந்த கால இடைவெளி உன் முன்னேற்றத்துக்கு மட்டும் இல்லை .. என் முன்னேற்றத்துக்கும் தான் ... என்னை நம்பி வந்த உன்னை நான் பத்திரமா பார்த்துக்க வேணாமா ? ஆனாலும் இவ்ளோ கியூட்டான  பொண்டாட்டியை சைட் அடிக்காமல் இருக்குறதும் கஷ்டம் தான் ... ஹா ஹா ... " என்று மனதிற்குள் பேசி  சிரித்தவன்  மிகவும் மென்மையாய்  அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு உறங்கினான் .. இதேபோல காலையில், " ஐ லவ் யூ டா .. அப்படி என்னடா தவம் பண்ணி இருப்பேன், நான் உன் மனைவியா ஆகுறதுக்கு ?  நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ஷக்தி .. குழந்தைடா நீ ,... வளர்ந்த குழந்தை .. பார்க்கத்தான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் லுக் எல்லாம் .. மனசுல பாசத்தை தவிர ஒன்னும் கிடையாது .. உனக்கு என்ன என்னை அவ்ளோ பிடிக்குமா ?  என் முன்னேற்றத்துல தான் நீ சந்தோஷமா இருப்பனா , உனக்காக என்ன வேணும்னாலும் சாதிப்பேன் டா .. இந்த நிமிஷம் இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி இருக்கு ... ஐ லவ் யூ சோ மச்  டா "  காதலில் கசிந்துருகி  அவனுக்கு தெரியாமல் அவன் நெற்றியில் இதழ் பதித்து வைத்தாள்  சங்கமித்ரா ..

அங்கு ஆதியின் வீட்டில் கண் திறந்ததுமே அறை  முழுவதும் பார்வையை சுழல விட்டாள்  வைஷ்ணவி.. தான் அவன் வீட்டில் இருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி கொண்டாள்.. எப்போதும் தங்கையை திட்டி கொண்டிருக்கும் தாயின் குரலை நினைவு கூர்ந்தாள் .. காபி கேட்கும் தந்தையை தேடினாள் .. திருமணம் ஆகிவிட்டாலே ஒரு பெண்ணால் கடக்கவே முடியாத எனினும் கடந்தே ஆகா வேண்டிய சூழ்நிலை இதுவல்லவா ? எனினும் ஒரு முறை ஷிவாங்கி - சங்கரனை நினைத்து பார்த்தாள் .. அவர்களும் தனக்கொரு பெற்றோர் தான் .. பெற்ற மகள் போல தன்னை பாவிக்கும் அவர்களை பேணி காப்பது தன கடமை என்று மனதில் குறித்து கொண்டாள் .. ஏதோ யோசனையில் இருக்கும் மனைவியை பாதி உறக்கத்தில் கூட கண்டு கொண்டான் ஆதி ..

" வையூ, இன்னும் 5 நிமிஷம் தூங்கிக்கிறேன் ..அதுக்கு அப்பறம் குளிச்சிட்டு அத்தை மாமாவை பார்க்க போகலாம் " என்றபடி அவளை இழுத்து அணைத்து  கொண்டு கிசுகிசுத்தான் ஆதிஷ்வர் ..

" நிஜம்மாவா அப்பா அம்மாவை பார்க்க போகலாமா ஆதி ?" என்று கேட்டவளின் குரலில் தவிப்பும் உற்சாகமும் இருந்தது .. தூக்கம் களைந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு " குட் மோர்னிங் பொண்டாட்டி " என்றான் அவன் ..

" ம்ம்ம்ம் குட் மோர்னிங் .. சரி சொல்லுங்க வீட்டுக்கு போறோமா ?"

" ஹே இது போங்கு  நான் உனக்கு இப்படியா குட் மோர்னிங் சொன்னேன் ? நீ முதலில் ஒழுங்கா குட் மோர்னிங் சொல்லு அப்போதான் நான்  பதில் சொல்லுவேன் " என்றான் ..

" சரியான விடாகொண்டன் " என்று முணுமுணுத்தபடி  அவன் கன்னத்தில் இதழ்பதித்து காலை வணக்கத்தை கூறினாள் ..

" இதுதான் என் வையூ குட்டி "

" போதும் கொஞ்சல் "

" ஹே நேத்து தான் மா கல்யாணமே ஆச்சு "

" யாரில்லைன்னு சொன்னது .. " என்று வெட்கபட்டாள்  அவள் ..

" எந்தன் உயிரே எந்தன் உயிரே

 கண்கள் முழுதும் உந்தன் கனவே

 என்னை மறந்தேன் என்னை மறந்தேன்

நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே " என்று பாடி அவள் கன்னங்களில் கோலமிட்டான் ஆதி ..

" ஷ்ஷ்ஷ்ஷ் ... முதலில் பதில் சொல்லுங்க ஆதி ..ப்ளீஸ் " என்று கொஞ்சினாள்  அவள் .

" ம்ம்ம் ஆமா டா ..அத்தை மாமாவை பார்க்க போறோம் ..சந்தோசம் தானே "

" எப்படி நான் மனசில் நினைச்சதை சொல்றிங்க ?"

" அதுதான் நேத்து மூணு முடிச்சு போடும்போதே நான் மனசுக்குள்ள வந்துட்டேனே , அதுக்கு பிறகு உன் மனசு நினைக்கிறது எனக்கு தெரியாமல் போயிடுமா ? என்றான் அவன் ..

" ஐ லவ் யூ ஆதி "

" ஹே .... நானும் கூட ஐ லவ் யூ டீ பொண்டாட்டி " என்றவன் அதை செயலிலும் உணர்த்தினான் ..

காலையிலேயே தேன்நிலாவுடன் கிளம்பிவிட்டான் மதி ..

"இப்போவே போகனுமா அண்ணா "

" ஆமா ஷக்தி .. நிலாவுக்கு ஹாஸ்பிட்டல் போகணுமே "

" ஐ மிஸ் யூ டீ தேனு " என்று தோழியை அணைத்து  நின்று சிணுங்கினாள் மித்ரா ..

" ஹா ஹா யாரு நீ என்னை மிஸ் பண்ணியா ? அடியே கல்யாணத்துக்கு அப்பறம் உன் மாமாவை தவிர நாங்கலாம் உன் கண்ணில் பட்டோமா  " என்று கிண்டல் அடித்தாள் அவள் ..

" அவளாச்சும் கல்யாணத்துக்கு பிறகுதான் என்னை சைட் அடிக்கிறா .. ஆனா நீங்க " என்று சொல்லி குறும்பாய் சிரித்தான் ஷக்தி .. அவன் கூட இப்படி பேசுவான் என்று மூவருமே எதிர்பார்க்கவில்லை ..

" யாருடா இது  என் கண்மணியை  கலாய்க்கிறது  " என்றபடி நிலாவின் தோளில்  கை போட்டான் மதி

" ஹா ஹா நான்தான் உங்க தம்பி " என்றான் ஷக்தி ..தம்பி என்ற வார்த்தையில் மதி அமைதியாகிவிட

" அடடா இது நல்ல கதையா இருக்கே .. மது இப்போவே சொல்லு , உனக்கு நானா இல்லை ஷக்தியா  " என்று போர்க்கொடி தூக்கி நின்றாள்  தேன்நிலா  ..

" ஒரு நல்ல காபிக்கு டிக்காஷனும் வேணும் பாலும் வேணும் குட்டிமா .. எனக்கு நீங்க ரெண்டு பெரும் அப்படித்தான் " என்று சொல்லி கண் சிமிட்டினான் மதி ..

" கொழுப்பு பாரேன் .. நாங்க உனக்கு காபி மாதிரியா ?" என்று அவனை அடிக்க வந்தவளின் கரங்களை பிடித்து சில்மிஷமாய் சிரித்தான் மதி ..

" ஹே மிது கண்ணை மூடிக்க லவ் சீன்  வருது " என்று ஷக்தி மறுபடி வாரவும் , மதி நிலா இருவரும் அவனை அடிக்க துரத்த , " ஹே என் மாமாவை விடுங்க " என்று சொல்லி அவர்களின் பின் ஓடினாள்  மித்ரா ..

மாலை நேரம், ஷக்தியின்  வீட்டில் குழுமியிருந்தனர் அனைவரும்.. மனைவியுடன் முதல் முறை ஜோடியாய் வந்திருந்தான் ஆதி .. தன் தந்தையின் தோளில்  சாய்ந்து செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் சங்கமித்ரா .. " நீ என்ன சின்ன பிள்ளையா " என்று தோசை கரண்டி தூக்க வேண்டிய சித்ராவும் எதிர்மாறாய்  இரு பெண்களையும் கொஞ்சி கொண்டிருந்தாள் .. கதிரும் காவியாவும் வழக்கம் போல வழக்காடி அனைவரையும் வசீகரிக்க , அவர்களுடன் இணைந்து கொண்டான் ஹிட்லர் .. லக்ஷ்மியும் நாராயணனும் கலகலப்பாய் இருந்த வீட்டை ரசித்து பார்த்தனர் .. முகில்மதி மட்டும் அடிக்கடி ஷக்தியையே  பார்த்து கொண்டு நின்றாள் .. அதை கவனித்தவனும் புன்னகையுடன் தங்கை அருகில் வந்து நின்றான் ..

" என்னடா "

" ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா "

" ஆஹான்  " என்று கண் சிமிட்டியவின் முகத்தை சந்தோஷத்தின் தேஜஸ் ..

" நிஜம்மாத்தான் அண்ணா .. நீங்களும் மிது அண்ணியும் இப்படி சந்தோஷமா இருக்கணும்னு நான் டெய்லி  வேண்டிக்குவேன் தெரியுமா ?"

" என் அன்பு தங்கச்சி கேட்டு , அதை இல்லன்னு சொல்ல கடவுளுக்கு மனசு வருமா ? அதான் நாங்க சேர்ந்துட்டோம் " என்றான் ஷக்தி ..

" வீடே நிறைஞ்சிருக்கு அண்ணா "

" இப்போ ஒரு குட்டி ஷாக் கொடுப்போமா ?"

" என்ன அண்ணா பண்ண போறீங்க ?"

" நீயும் வா சொல்றேன் " என்றவன் அனைவரும் தங்களை கவனிக்கும்படி தோரணையாய்  நின்று அதை சொன்னான் ..

அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி கொப்பளிக்க , மித்ரா மட்டும் அவனை கண் இமைக்காமல் பார்த்தாள் ..

அப்படி என்ன நடந்துச்சு ? அடுத்த எபிசொட் ல சொல்றேன்

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.