(Reading time: 13 - 26 minutes)

"ன்ன ஒன்று, நான் நினைக்காதது நடந்து விட்டது. டாக்டர் அவசரமாக அழைத்தவுடன் ஹாஸ்பிடல் வந்த நான், பாட்டி கடைசி நிமிடத்தில் உன்னை மணமுடிக்க நிர்பந்த படுத்துவார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்க வில்லை.... ஆனது ஆகட்டும் என்று, சட்டென்று முடிவு எடுத்து உன் கழுத்தில் தாலி கட்டினேன். அப்பொழுது கூட நினைக்க வில்லை, பாட்டிக்கு இப்படியாகும் என. உன் கல்யாணத்தை கண்ட திருப்தியுடன், அந்த ஜீவனும் நிமதியாக உயிர் விட்டார்கள்." நா தழுதழுக்க பேசினான் சரண்.

தன் இயல்புக்கு மீறி, அவன் மீது கத்தி விட்டதை உணர்ந்த துளசி, வெட்கமடைந்தாள். 'சாரி' கேட்க அவள் மனது அப்பொழுதும் ஒப்பவில்லை... "என்ன இருந்தாலும் நீங்கள் உங்கள் அண்ணன் இறந்ததை மறைத்து விட்டீர்கள்... என் மனசு, எதையும் ஏற்க மறுக்கிறது" என்று வீம்புடன் சொன்னாள்.

வேறு எதுவும் பேசப் பிடிக்காமல் சரண், " ஏற்கனவே என் அம்மாவும், அப்பாவும், என் மேல் கோபமாக இருக்கிறார்கள். இதைப் பற்றி நாளை பேசலாம். இதற்கு மேலே எனக்கு இதை பற்றி பேச விருப்பமில்லை. முதலில் நாளை ஹாஸ்பிடல் போகலாம்... உன் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொள்ளலாம்.... உனக்கு இந்த மாதம்".... எப்படி கேட்பது என்று தயங்கிவனை, துளசி இல்லை என்று தலை ஆட்டினாள்.

ஒன்றும் கூறாமல், ஒரு பெருமூச்சை விட்டவன், " என் பெற்றோருக்கு, இதை பற்றி, அதாவது கரண் இப்படி ப்ளான் போட்டது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது... நாளை ஹாஸ்பிடல் போய் விட்டு வந்த பிறகு, உன் உண்மை நிலை அறிந்து கொண்டு பிறகு இது பற்றி யோசித்து முடிவு செய்யலாம்.. என்ன ஆனாலும், நீ என் மனைவி".

"சரி துளசி,.... நீ போய் அந்த ரூமில் தூங்கு. உன் பெட்டிகளை அங்கு வைத்திருக்கிறேன்.. கதவை வேண்டுமானாலும் தாளிட்டுக் கொள். எனக்கு மிகவும் அலுப்பாக இருக்கிறது. நாளை காலை பார்க்கலாம். குட் நைட்" என்று கூறி விட்டு குளியலறையை நோக்கி நடந்தான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவள், நெடிய பெரு மூச்சு விட்டு தன் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டாள் துளசி.

இனி....

Episode # 05

Episode # 07

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.