(Reading time: 20 - 39 minutes)

"வளும் ரஞ்சித்தும் காதலித்தாகவும்,நீ வலுக்கட்டாயமா அவனை அவக்கிட்ட இருந்தும் பிரித்ததாகவும் சொன்னா!அவ நம்பிக்கையை நீ குழி தோண்டி புதைத்தாகவும் சொன்னா!"

அவள் கண்களில் கண்ணீர் திரண்டது.

"நம்பிக்கையா?அது எங்கே இருக்கிறது?"-அவள் பலமாக அழ ஆரம்பித்தாள்.

யுகேனின் இதயம் வலித்தது.

"நான் ரஞ்சித் மேலே உயிரையே வைத்திருந்தேன்!ப்ரியா அக்கா ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக நான் அவனை வேணாம்னு தூக்கி எறிந்தேன்!எனக்காக அவன் நிறைய வேதனைகளை அனுபவித்தான்!கடைசியில,இன்னிக்கு வரைக்கும் விதி எங்களை ஒண்ணா வாழ வைக்கலை!"

"நீ என்ன சொல்ற?"

"நடந்த எல்லாத்துக்கும் காரணம் நானா?அன்னிக்கு என் காதலை விட்டுக்கொடுத்தேன்!என் வாழ்க்கையை விட்டுக்கொடுத்தேன்!என் சொந்தங்களை விட்டுக்கொடுத்தேன்!இன்னிக்கு என் நம்பிக்கையை விட்டுக்கொடுத்திருக்கேன்!தப்பு பண்ணது யாரோ தண்டனை நான் மட்டும் தான் அனுபவிக்கிறேன்!"

"எனக்குன்னு இருந்த ஒரே நம்பிக்கை என் அப்பா!அவரும்...."-யுகேந்திரனின் கண்கள் கலங்கின.

"இன்னிக்கு தப்பே பண்ணாம எல்லார் முன்னாடியும் குற்றவாளியா நிற்கிறேன்!"-பல நாட்களாய் நெஞ்சில் இருந்த பாரத்தை இறக்கினாள்.

அதை யுகேந்திரன் மட்டுமே கேட்கிறான் என்பது அவள் நம்பிக்கை!ஆனால் அவள் குடும்பமே கேட்டுக்கொண்டிருந்தது என்பதே உண்மை!!!

"நீ ஏன் எங்களை ஏத்துக்க மாட்ற?"

"என்னால எப்படி முடியும்னு நினைக்கிறீங்க?இங்கே நான் கைதியா தான் வாழுறேன்!உங்க அத்தனை பேரோட அக்கறையும் என் அப்பாவோட பாசத்துல துளியும் ஈடாகாது!அன்னிக்கு அவர் என்னை அனுப்பினது உங்களுக்கு பயந்துன்னு நினைத்தீங்களா?இல்லை...உங்க உரிமையை கொஞ்சமாவது நீங்க அனுபவிக்கணும்னு தான்!"

"இதுநாள் வரைக்கும் அவர் என் கூட பேசலைன்னா அதுக்கு காரணம்,செய்த தவறுக்கு அவர் தண்டனையை தனக்கு தானே கொடுத்துட்டு இருக்கார்!"

"பிறப்பால நான் இந்த வீீட்டு பொண்ணா இருக்கலாம்!ஆனா,நான் என்னிக்கும் மகேந்திரனோட வளர்ப்பு தான்!ஐ ஆம் ஆல்வேஸ் வெண்ணிலா மகேந்திரன்!"-என்று கூறிவிட்டு அவள் திரும்ப அப்போது தான் அனைவரும் நின்று அவள் பேசுவதை கவனித்திருப்பது தெரிந்தது.அவள் திகைத்து போனாள்.யுகேந்திரனும் திகைத்தப்படி எழுந்தான்.

ங்காவின் கண்கள் கண்ணீரை சுரந்தன.அவர் அப்படியே மயங்கி சரிந்தார்.

"மா!"-வார்த்தைகள் என்ன தான் காயம் செய்தாலும்,மனம் அவ்வார்த்தைகளை சட்டைப்படுத்தவில்லை.

பிரசாத் பதறியப்படி அவரை தாங்கினார். அனைவரும் பதறினர். நிலா ஓடிச்சென்று அவரை தட்டி எழுப்பினாள்.அவர் நாடியை பார்த்தாள்.நல்லவேளை அது சீராக இருந்தது.அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் இது!!

"ரூம்க்கு கூட்டிட்டு வாங்க!"-பிரசாத் அவரை தூக்கிக்கொண்டு அவர் அறையில் கிடத்தினார்.நிலா ஸ்டெச்சஸ்கோப்பை அவர் நெஞ்சில் வைத்து பரிசோதித்தாள்.

பின்,அவர் கையில் ஊசி போட்டாள்.

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை...கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடுவாங்க!"-அவள் அமைதியாக வெளியே வந்தாள்.மனம் கனத்தது.ஏதோ தவறு செய்வதாய் முதன்முதலாய் தோன்றியது.அவள் கண்ணீர் சிந்தினாள்.இனி அந்தக் கண்ணீருக்கு காலம் மட்டுமே பதில் அளிக்க இயலும்!!!

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.