“தாத்தா என்னைப் பிடிங்க பார்ப்போம்…. பிடிங்க…” என்று மாணிக்கம் தாத்தாவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் நதிகா…
அந்நேரம் பவித்ரா, நதிகாவை அழைக்க, “இதோ வந்துட்டேன் அத்தை….” என்றபடி குரல் கொடுத்தாள் நதிகா…
“நதி பார்த்துடா… மெதுவா…” என சொல்லிக்கொண்டே மகத் வர, “துருவ் நீயும் வா….” என அவனையும் அழைத்துக்கொண்டு சென்றாள் நதிகா…
நதிகா வந்ததும், துருவனை பார்க்க, துருவனும் அவளை ஆர்வமுடன் பார்த்தான்…
அவனைப் பார்த்துக்கொண்டே, “அத்தை எதுக்கு கூப்பிட்ட?...” என நதிகா பவித்ராவிடம் கேட்க
“அதுவா நதி…. இதோ இந்த குட்டி துருவையும் அவன் அம்மா, பாட்டியையும் உனக்கு இன்ட்ரோ குடுக்கத்தான்….” என்றாள் பவித்ரா….
“துருவா?....” என விழி விரிய கேட்ட நதிகாவிடத்தில்
“ஆமா நதி… இதோ இந்த குட்டிப்பையன் பேரு தான் துருவ்… இவங்க அவனோட அம்மா ருணதி… இவங்க பாட்டி கோகிலவாணி….” என்று பவித்ரா சொன்னதும்,
இரண்டு மழலைகளும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துக்கொண்டனர்….
“அம்மா….” என்றபடி துருவ் ருணதியின் முகம் பார்க்க, அவளோ “பேசு….” என்று தலை அசைத்தாள்…
துருவ் ருணதியின் முகம் பார்த்த அதே வேளையில், நதிகா மகத்தின் முகம் பார்க்க, அவனும் “பேசு…” என்று தலை அசைத்தான்…
துருவ் ஒரு அடி எடுத்து வைத்து முன்னாடி வந்து நதிகாவை நோக்கி கைநீட்ட, நதிகா கொஞ்சமும் யோசிக்காமல் அவனுக்கு கை கொடுத்தாள்…
“இந்தா சாக்லேட்…’ என நதிகா அவனுக்கு கொடுக்க, அவன் தான் வைத்திருந்த இரண்டு பலூன்களில் ஒன்றை அவளுக்கு கொடுத்தான்…
அவளும் புன்னகையுடன் அதை வாங்கிக்கொள்ள, “வா நாம விளையாடலாம்…” என்றபடி நதிகா அவனை அழைக்க, “ஹ்ம்ம்… வா….” என்றபடி துருவ்-ம் அவளுடன் தத்தி தத்தி நடந்தபடி செல்ல, அனைவரின் பார்வையும் அந்த இரண்டு மழலைகளின் மீதே இருந்தது…
“பாருடா… எங்கிட்ட பேச அவ்வளவு பயந்தான்… இப்போ நதிகா வந்து கூப்பிட்டதும், அவளோட உடனே விளையாட போயிட்டான்… ஹ்ம்ம்….” என பவித்ரா கிண்டலாக சொல்ல,
“சின்னப்பசங்களுக்கு அவங்க வயசு பிள்ளைங்க தான் பிடிக்கும்… அதான் துருவ் நதியோட விளையாட போயிட்டான்…” என காவேரி சொல்ல
“நீங்க சொல்லுறது சரிதான்…” என்று ஆமோதித்தார் கோகிலவாணியும்….
அந்நேரம், ருணதியின் பார்வையும், மகத்தின் பார்வையும் ஒருங்கே சந்தித்துக்கொள்ள, வார்த்தைகள் அங்கே அர்த்தமற்றதாய் போனது இருவருக்கும்….
தொடரும்
{kunena_discuss:907}