(Reading time: 45 - 89 minutes)

ந்த பன்னீர் செல்வம் என் அம்மாட்ட ஃபர்ஸ்ட் வைஃப்னு ப்ராப்ளம் செய்தா நடந்த கல்யாணத்துக்கு எந்த சாட்சியும் கிடையாது…..குழந்தைய கொன்னுட்டு உன்னை யாருன்னே தெரியாதுன்னுட்டு போய்டுவேன்னு  சொல்லிட்டார் போல….அப்பதான் பிறந்திருந்த என்னை தூக்கிட்டு என் அம்மா என் பாட்டிட்ட திரும்பி வந்தாச்சு…. தாத்தா அம்மா சின்னதா இருந்தப்பவே இறந்திருந்தாங்க….சோ பாட்டி மட்டும் தான் அம்மாவுக்கு இருந்த ஒரே சொந்தம்….தென் அம்மா கிடச்ச வேலைக்கு போக ஆரம்பிச்சுருக்காங்க….எனக்கு 8 வயசுல என் அம்மாவுக்கு அடுத்த கல்யாணம். எஸ் ஐ பால்ராஜ்….உங்க பொண்ணையும் அவ குழந்தையையும் என் குடும்பமா பார்த்துப்பேன்னு அந்த ஆளு என் பாட்டியையும் அம்மாவையும் கரைச்சு தான் கல்யாணம் செய்தது.

ஆனா அம்மாவுக்கு அடுத்து ட்வின்ஸ் பாய்ஸ் பிறக்கவும் என்னையும் பாட்டியையும் மட்டும் தனியா விட்டுட்டு அம்மாவை குழந்தைகளோட கூட்டிட்டுப் போய்ட்டார். அப்ப என் பாட்டிக்கு பரலடிக் அட்டாக் வேற வந்து படுத்த படுக்கை….அன்னைல இருந்து வீட்டு வேலைல இருந்து எல்லாம் நான் தான்….பாட்டி வீடு ஓட்டு வீடுதான் ஆனா மூனு வீடு…மத்த ரெண்டு வீட்டு வாடகையிலும் மிலிட்ரில இருந்து ரிடையர் ஆகி இருந்த தாத்தாவோட பென்ஷலயும் தான் எங்க லைஃப்…. ஒரு நாள் அந்த பால்ராஜ் வந்து என்னை கூப்பிட்டுட்டு போனார் ஸ்டேஷன்கு….அப்ப எனக்கு 10 வயசு கிட்ட இருக்கும்…..என்னை அங்க உட்கார வச்சுட்டு செல்ல இருந்த மூனு ஜென்ட்ஸ்…..அவங்க ட்ரஸ்ஸ கழற்றி ஷாட்ஸோட விட்டு அடி பின்னிட்டாரு…. இப்ப உங்க பக்கத்துல இருந்து சொல்றப்பா இது என்னமோ பயமா இல்லை…. பட் அப்போ ரொம்ப பயந்துட்டேன்….மறுநாள் என்னை அந்த செல்ல போட்டு பூட்டி நைட் முழுக்க உட்கார வச்சப்ப பயத்துல உயிரே போய்ட்டு….எப்ப என்ன செய்வாங்கன்னு ஒவ்வொரு நொடியும்…...இப்பவரை ஸ்டேஷன்னா பயம் வரது இதால தான்…. அவங்க நம்மள என்ன வேணாலும் செய்யலாம்…பட் நமக்கு ஹெல்ப்க்குன்னு யாருமே வர முடியாத இடம் அதுன்னு தோணும்….”

தன்னோடு அணைத்துக் கொண்டான் சொல்லிக் கொண்டிருந்தவளை. “இப்ப கூட உனக்கு ஹெல்ப் வர முடியாத இடம்னு ஒன்னு இருக்றதா தோணுதா லியா பொண்ணு…?…உனக்காக நான் வர மாட்டனா?”

“அதான் இப்ப உங்க பக்கத்துல இருக்றப்ப பயமா இல்லைனுதானே சொல்றேன்…” அவள் பதிலில் தன்னவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்….

“அந்த ஜெயில் நாளுக்கு அடுத்து என் பாட்டி வீட்டுக்கு வந்த அந்த ஆள் என்னையும் பாட்டியையும் வீட்டை விட்டு வெளிய தூக்கிப் போட்டுட்டு கதவை பூட்டி சாவி எடுத்துட்டுப் போய்ட்டார்….அம்மாவும் வந்திருந்தாங்க….ஒரு வார்த்தை சொல்லலை அழுதுகிட்டே அவர் கூட போய்ட்டாங்க…… ஆக்சுவலி அந்த மூனு வீடும் தாத்தாவோடது….பாட்டி அம்மா ரெண்டு பேருமா அதை என் பேர்ல மாத்திருக்காங்க இந்த செகண்ட் மேரேஜுக்கு முன்ன…...அந்த இடம் அப்ப ஸ்லம்….இப்ப சோஃபிஸ்டிகேட்டட் அப்பார்ட்மென்ட்ஸ் உள்ள பாஷ் ஏரியா….. அந்த மூனு வீடையும் அப்பார்ட்மென்ட் கெட்ட விலைக்கு கேட்றுக்கான் எவனோ…..மைனர் சொத்து…ஒன்னும் செய்ய முடியாது….அம்மாவை என்னை எதுவும் செய்துடுவேன்னு சொல்லி மிரட்டி…..அப்படி மிரட்டதான் என்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு போனது,,, என்னை அம்மாவோட டாட்டர் இல்லைனு லீகலி டிஸ்வோன் செய்து எழுதி வாங்கிட்டு….வீடை எதோ கோல்மால் செய்து அந்த பால்ராஜ் வித்துட்டார்….

அதுக்கு பிறகு அவங்களை நான் இப்ப வரைக்கும் பார்த்தது இல்லை. எங்க இருக்காங்கன்னே தெரியாது….பட் அன்னைக்கு பாட்டி ரோட்ல படுத்திறுந்தாங்க…..மழை பெய்ய ஆரம்பிச்சது…..நான் என்ன செய்யன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன்….எப்படியோ ஒரு மாதிரி இருந்துச்சு…. பயம்மா….எனக்குன்னு எதுவுமே இல்லாம….சூன்யமா….எது மேலயும் கன்ட்ரோல் இல்லாம…என்ன செய்யனும்னே தெரியாம… எப்படின்னு சொல்ல தெரியலை… இப்ப வரை அந்த ஞாபகம் வர்றப்ப ரொம்ப ஒரு மாதிரி ஆகிடும்….அன்னைக்கு நீங்க கிளம்புற அன்னைக்கு மயங்கி விழுந்தனே அது கூட இந்த ஞாபகத்துல தான்….

பன்னீர் செல்வம் செய்த தப்பாலதான எனக்கு அப்படி ஒரு நிலமை….

பக்கத்து வீட்ல இருந்தவங்கதான் அப்ப வேற ஒரு வீடு பார்த்து கொடுத்தாங்க…..எப்டியோ படிச்சு வளந்து இந்தா உங்க கூட மேரேஜும் நடந்தாச்சு….” இறுதி வரியில் மகிழ்ச்சி வந்திருந்தது அவளது குரலில்.

தன் கை வளைவுக்குள் வைத்திருந்தான் அவளை அவளது கணவன்.

“அம்மா வரவும் போய்டுவேன்னு சொல்லிட்டு கொஞ்ச நாள் என்ட்ட சரியா பேசாம இருந்தியே அதுக்கும் இதுதான் காரணமா?”

“ம்…ஆமா….நீங்களே கவனிச்சுருப்பீங்க…எனக்கு கோபம் வந்தா ராச்சஸதனாமா வரும்….உங்க மேல உள்ள கோபத்துல அரண் அண்ணா டைரிய கொடுத்தனே அதுவே சின்னதுன்ற மாதிரி கன்னா பின்னானு வரும்....இந்த பன்னீர் செல்வம்..பால்ராஜ்னால எனக்கு ஜென்ட்ஸ் மேல நம்பிக்கையே கிடையாது….சோ நீங்க செய்ற எது எப்ப எனக்கு தப்பா புரிஞ்சாலும்…உடனே உங்களை நம்பாம என் கோபத்தால உங்களை ஹார்ம் செய்துடுவனோன்னு பயம்…என்னதான் அப்படி செய்ய கூடாதுன்னு முடிவு செய்துகிட்டாலும் திரும்ப செய்ய மாட்டேன்னு நம்ப முடியலை….நீங்களே சொன்னீங்களே டெம்பரரி திருந்தின மூட்னு…..அதான் என் பேக்ரவ்ண்ட்ல வந்த பொண்ணுக்கு கல்யாணமே தப்பான விஷயம்னு பட்டுது…” பின் தன் முடிவை மாற்றிக் கொண்ட காரணத்தையும் சொன்னாள்.

“நின்னு பேஸ் செய்யனும்னு தெரியுது…பட் நிஜமா இது ரிப்பிட் ஆகாதுன்னு தோணலை ஜோனத்… வல்லராஜன் விஷயத்துல அந்த ஆள் ஜஸ்ட் மிஸ்தான்…..மர்டர் செய்துடுவனோன்னு கூட பயமா இருக்குது.”

“ப்ச்…அப்படில்லாம் ஆகாது லியாமா…”

“இல்ல ஜோனத் என் கோபம் பத்தி உங்களுக்கு தெரியலை…..ஒரு டைம் ட்ரெய்ன்ல லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஒருத்தன் ஏறிட்டான்…..கொஞ்சம் வயசானவன்….கண் பார்வை பத்தலைனு வேற சொன்னான்….எல்லோரும் விட்டுடாங்க…..கொஞ்ச நேரம் கழிச்சு டாய்லட் யூஸ் செய்துட்டு வெளிய வந்த பொண்ணை வெளிய வெயிட் செய்துட்டு இருந்த மாதிரி நின்னுட்டு இருந்த இவன் ஃபோர்ஸ்ஃபுல்லா தன்னோட சேர்த்து இழுத்துட்டு உள்ள போய் லாக் செய்துட்டான்….அட்டம்ட் ஆஃப் ரேப்…ட்ரெய்ன் சவ்ண்ட்ல அந்த பொண்னு கத்துன சத்தம் முதல்ல கேட்கல….அவ ஃப்ரெண்ட்தான் போனவள ரொம்ப நேரம் காணோமேன்னு தேடிப் போன ஆள்…டாய்லட் உள்ள பூட்டிருக்கவும் முதல்ல இவ தப்பா நினைக்கலை…..திரும்புறப்ப அந்த கேர்ள் சவ்ண்ட் ….கதவு பூட்டை உடச்சு காப்பாத்தினோம்….அது வரை என் கோபத்தை சரின்னு சொல்லலாம்….தென் நெக்‌ஸ்ட் ட்ரெய்ன் கிளம்புறப்ப வேற ஒரு பையன் ஏறப் போனான்….நான் கதவை உள்ள லாக் செய்துட்டு போய்ட்டேன்…” அப்ப எனக்கு அது துளி கூட தப்பா தெரியலை….கண்மண் தெரியாத கோபம்…..செத்தா சாகட்டும்னு இருந்துது”

“சரி எப்ப அது தப்பா தெரிஞ்சிது…?”

“இப்ப அன்னைக்கு அரண் அண்ணா வீட்ல ரெண்டு பேர் பேசிகிட்டு இருந்தாங்கன்னு சொன்னேன்ல….அவங்க அது நீங்கன்ற மாதிரி ஏதோ சொன்னாங்கள்ள……அப்பதான் ஏறின பையன் ஒரு வேளை உங்க மாதிரி நல்ல டைப்பாவும் இருந்திருக்கலாமேன்னு தோணிச்சு….”

“உண்மைய சொல்லனும்னா அது நிஜமாவே நான் தான்…பட் அதெல்லாம் போட்டு குழப்பிகிடாத….பைதவே….” அவனை பேச விடவில்லை அவள்

“வாட்?????”

“அதான் சொல்றேன்ல அதெல்லாம் போட்டு குழப்பிகிடாதன்னு….”

“ஜோனத் என் மேல கோபமே இல்லையா ஜோனத்?”

“அது நடந்த அன்னைக்கு செம கோபம்தான்…அடுத்து நீ லேடீஸ்ட்ட நடந்துக்கிறத பார்த்த பிறகு அது மாறிட்டு…..ஐ டோல்ட் யூ …..நான் உன்னை விரும்பி கல்யாணம் செய்தேன்னு….”

“ஜோனத்…”

“ப்ளீஸ் லியாமா இதுக்காக வேற ஃபீல் பண்ணாத….இப்ப கவனிக்க வேண்டிய விஷயம் வேற…உனக்கு ஏன் கோபம் வருதுன்னு தெரியுதா?”

“ம்…அதெல்லாம் தெரியுது….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.