(Reading time: 26 - 51 minutes)

நான் தான் அந்த கம்பேனி ஐடியா பின்னாடி இருக்கேனு உங்களுக்கு தெரியும்! ஆனா நான் உங்களை சேலக்ட் செய்யலை.. சொல்ல போனா உங்களை ஜிஜூ சேலக்ட் செய்திருக்கேனு சொன்னப்ப நான் வேணாம்னு தான் சொன்னேன்... ஆனா நீங்கதான் அந்த கம்பேனியை வழி நடத்தி செல்ல சரியான ஆள்னு அவர் ஏற்கனவே சொல்லிட்டாரு...இன்னும் ஒரு விஷயம்... இப்போ அந்த கம்பேனியை என் பேருல ரிஜிஸ்டர் செய்ய முடியாது... நேக்ஸ்ட் வீக் ரிசல்ட்.. அதனால் அந்த கம்பேனியை உங்க பேருல தான் ரிஜிஸ்டர் செய்ய போறோம்! பினாமினு நினைச்சுக்காதீங்க.. அது உங்க கம்பேனிதான்... எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இனிமேல்! நீங்க என்கிட்ட என்கீழே வேலை செய்யனும் எந்த அவசியமும் இல்லை...உங்க ஈகோவை எந்த விதத்திலும் பாதிக்காது..

அப்புறம் நான் ஒரு ப்ளாக்ல கவிதை எழுதறேன்... குந்தவை பெயருல! கட்டுரையும் கதைகளும் நீலாம்பரினு பெயருல எழுதறேன்! புக்ஸ் பப்ளிஷ் செய்யனும் இருக்கேன்... நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அவங்க கால் செய்திருப்பாங்க நிச்சயமா.. அப்புறம் ஒரு சோஷியல் காங்க் ஒன்னு கோஆர்டினேட் செய்து  அதனால சில சோஷியல் வர்க் செய்திட்டு வரேன். கரவுட் ஃபண்டிங்க் மூலமா ஹார்ட் பேஷட்ஸுக்கு உதவி செய்துட்டு வரேன்... இரண்டு குழந்தைகளுக்கு என் சொந்த சம்பாத்தியதிலிருந்து ஸ்பான்சர் செய்யறேன்... என் நண்பர்கள் சில பேரும் இதில் எல்லாம் துணையா செய்திட்டு வராங்க.. கிருஷ்ணாவை தத்து எடுக்கனும்னு முடிவு செய்தும் இருந்தேன்...டேவிட், டீனா, வெற்றி இப்படி சில பேர் இருக்காங்க... அவங்களோட உதவியில இதை செய்திட்டு வரேன்..

ஆனா இதுவரைக்கும் இதை எல்லாத்தையும் நான் தான் செய்யறேனு யாருக்கும் தெரியாது... நான் என்னை இதுல அடையாள படுத்திக்க முயலவில்லை.. பட் யாரோ உங்ககிட்ட இதை எல்லாத்தையும் ஏற்கனவே சொல்லிட்டாங்கனு நினைக்கறேன்! ஆனா சாரி... இதையேல்லாம் சொல்லாம மறைக்கனும்னு நினைக்கல நாம கொஞ்சம் சமாதானம் ஆனபிறகு சொல்லலாம்னு...ஏனா... நான் நானா தான் உங்களுக்கு பிடிக்கனும்னு நினைச்சேன்...குழலீயை அப்படியே ஏற்றுக்குற ஆளாய்தான் நீங்க எனக்கு வேணும்னு நினைச்சேன்... நான் மறைவா செய்யற இந்த விஷயங்களினால் இல்லை! நீங்க உங்க மனசை தெளிவா சொல்லிட்டால் பரவாயில்லை... நான் என் மனதை சமாதானம் செய்துப்பேன்! கொஞ்சம் கஷ்டம்தான்...ஆனால் வாழ்க்கையில எதுவுமே அவ்வளவு சுலபமா கிடைக்காதுல... அப்படிதான் எனக்கு இந்த நேசமும் திருமணமுன்னு நினைச்சிக்கறேன்..' என்றுவிட்டு அவன் முகத்தையே பார்திருந்தாள். பதில் ஏதும் இல்லை அவனிடத்தில்! 

சரிங்க... நான் போய் படுக்க போறேன்... குட் நைட்..அத்தான்!

நில்லு! கிருஷ்ணா எங்க??

கீழே அத்தைகிட்ட இருக்கறான்.. 

ஹம்ம் சரி... என்றவாறு வந்து அவள் இடையோடு கைகொடுத்து தூக்கியவன் கட்டிலில் அவளை இறக்கி வைத்தான். ஒரு நிமிடம் அதிர்ச்சியிலிருந்த குழலீ அடுத்த நொடி முகம் முழுவதும் குங்குமம் போல் வெட்கத்தினால் சிவந்துவிட்டது. 

அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன்... இதுக்கும் மேல என்னால் பொறுமையா இருக்க முடியாது சக்தி டார்லிங்க்! இந்த வாழ்க்கை முழுக்க இந்த பிரபுவின் பூங்குழலியாய் துணையாய்... சிவத்தின் சக்தியாய் துணை வருவீயா?? என்று சிறு நகை பெட்டியை நீட்டினான். அதில் ஒரு ஜோடி கொலுசுகள் இருந்தது.

அவள் முகம் சிவக்க தலையாட்டி சத்தியமாய் என்றவாறு அவள் பாதங்களை அவனிடம் நீட்ட பிரபுவோ அவனது தோடை மீது வைத்து தான் ஆசையாய் வாங்கி வந்த கொலுசுகளை மாட்டிவிட்டு அந்த பாதங்களுக்கு முத்தம் ஒன்றும் வைத்தன்.

தே அறை..அதே கட்டில்.. அதே ஒற்றை தலையணை! ஆனால் இம்முறை குழலீயோ அவன் மார்பில் தலைவைத்து படுத்திருந்தாள்...

ஏங்க...

...

சிவா அத்தான்...

சொல்லுடா...

நீங்க உங்க காதல் காவியத்தை சொல்லவேயில்ல.. எப்போயிருந்து என்னை பிடிக்க ஆரம்பிச்சது??

எப்போயிருந்து??? நீ ஏழாவது அட்மிஷன் போட மாமாவோட  ஸ்கூலுக்கு வந்ததிலிருந்து... தெரியல இது எப்போ எந்த சூழ்னிலையில காதலா மாறுச்சுனு கேட்டா எனக்கு தெரியல... ஆனா நீ ஏழாவது படிக்கும் போது தொடங்கிய அந்த நேசம் தினமும் வளர்ந்திட்டு தான் போகுது... அதன் வெளிப்பாடுதான் இவ்வளவும் நினைக்கறேன். நான் இங்கயிருந்து கிளம்பும் முந்தின நாள் ஒரு பயங்கர கனவு என்று முழுவதையும் விவரித்தான்.. அப்போதான் ஒரு பயம் வந்திட்டு... இப்படி ஏதாவது என்கிட்டயிருந்து மறைக்கிறாளானு... அதனால தான் உன்னை மிரட்ட வேண்டியதா போச்சுடா! மற்றபடி நீ சொன்னது எல்லாமே ஏற்கனவே எனக்கு தெரியும்... நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கே வெற்றி எல்லாத்தையும் சொல்லிட்டான்...சாரிடா ஐ லவ் யூ பூங்குழலீ! நீ என் உயிர் டீ... என் உயிர்சக்திடீ' என்றவாறு அவள் நெற்றியில் இதழ் பதித்தான். 

ஐ லவ் யூ பிரபு! என்று இறுக அணைத்துக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.