(Reading time: 23 - 45 minutes)

"பிருத்வி நீங்க வரூனை போட்டியா நினைக்கவில்லைன்னாலும்... வரூன் உங்களை போட்டியா நினைச்சு தான் இப்போ இந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிட்டு இருக்கான்... உங்களுக்கு ஏதாவது வேலை விஷயத்துல தொல்லை கொடுப்பான்...

அதுமட்டுமில்லாம ஃபேமிலி மேட்டர்லயும் ஏதாவது செய்ய நினைப்பான்... பார்ட்டில கூட யுக்தாவோட வரூன் பேசிக்கிட்டு இருந்ததை பார்த்தேன்... வரூன் யுக்தா கூட வழிஞ்சு வழிஞ்சு பேசறா மாதிரி இருந்துச்சு பிருத்வி... யுக்தாவும் அந்த வரூன் கூட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தான்னு நினைக்கிறேன்... நீங்களும் தானே பார்த்தீங்க...

பிருத்வி எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க... அந்த வரூன் உங்களை பழிவாங்க யுக்தா கூட ஏதாவது தப்பா..."

அவள் முழுதாக சொல்லி முடிக்கவில்லை... அதற்குள் கோபத்தோடு காரை நிறுத்தினான் பிருத்வி... அதிலேயே அவள் அமைதியாகிவிட்டாள்... இருந்தாலும் அவன் விடவில்லை...

"சப்னா எது பேசினாலும் யோசிச்சு பேசு... உனக்கு அவங்க ரெண்டுப்பேரப் பத்தி என்னத் தெரியும்... வரூனுக்கு உன்னை பிடிக்காது... நீ என்கூட பேசறது பிடிக்காம தான் அவன் அப்படியெல்லாம் செய்தான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அதுக்காக அவன் எல்லாப் பொண்ணுங்களையும் தப்பா பார்ப்பவன் கிடையாது... நான் அவன் ப்ரண்ட்ஸ்ஷிப்பை கட் பண்ணாலும்  அவன் அப்படியில்லை... எல்லா பெஸ்டிவல்க்கும் என்னோட பர்த்டேக்கும் அவனோட விஷ் இல்லாம இருக்காது... அவன் எனக்கு மெஸெஜ் பண்ணுவான்... அதுக்கு நான் ரிப்லை பண்ணலன்னாலும் அவன் இதுவரைக்கும் எனக்கு மெஸெஜ் பண்ணாம விட்டதில்லை...

யுக்தா என்னோட மனைவிங்கறதால அவளோட அவன் பேசியிருப்பான்... என் பேமிலில இருக்கவங்க என்னை மாதிரி அவன் மேலே கோபமா இல்லை... இருந்தாலும் அவங்கக்கிட்ட அவன் பேசினது கிடையாது... யுக்தா மூலமா என்னோட திரும்ப பேச முடியுமான்னு அவன் ட்ரை பண்ணியிருப்பான்...

யுக்தாவும் தப்பான பொண்ணு இல்லை... என்னை லவ் பண்றதால என்னை கல்யாணம் செஞ்சுக்கனும்னு அவ இப்படியெல்லாம் செஞ்சாளே தவிர அவ கேரக்டர் தப்பு கிடையாது... இதுமாதிரி இன்னொருதடவை பேசாத..." என்று அவளை எச்சரித்தான்...

சப்னாவும் "ஸாரி பிருத்வி இனி இப்படி பேசமாட்டேன்..." என்று மன்னிப்பு கேட்டாள்...

சிறிது நேரம் காரில் மௌனமே நிலவியது... அதற்குப்பிறகு காரை நிறுத்திய பிருத்வி... "சப்னா உன்னோட வீடு வந்துடுச்சு.." என்றான்.

"என்ன பிருத்வி உங்க வீட்டுக்கு தானே போகச் சொன்னேன்.."

"இந்த நேரத்துல நீ என்னை எங்க வீட்டில் விட்டுட்டு தனியா போகறது நல்லதில்லை... நான் ஆட்டோ பிடிச்சுப் போய்டுவேன்...

சப்னா நீ திரும்பவும் என்னைப் பாக்கறதோ... இல்லை என்கிட்ட ஃபோன்ல பேசறதோ வேண்டாம்... நீ தொடர்ந்து ஃபோன் பண்ணதால தான் நான் எடுத்தேன்... இன்னைக்கு பார்ட்டில பார்த்ததால் தான் பேசினேன்... திரும்ப திரும்ப இது நடந்தா அது உனக்கு நல்லதில்லை... உன் லைஃப் தான் ஸ்பாயில் ஆகும்... புரிஞ்சுதா.." என்று சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டான்..

இவ்வளவு நடந்தும் இன்னும் வரூன் மேலயும்... யுக்தா மேலயும்...  அவனுக்கு சாப்ட் கார்னர் இருக்கே... இவனை நெருங்குவது கஷ்டமாக இருக்குமோ... யுக்தா வரூனோடு பேசியதை பிருத்வி கோபமா பார்த்துக்கிட்டு இருந்ததால் தான் இப்படியெல்லாம் இவள் பேசினாள்... ஆனா இந்த ப்ளான் வேலைக்கு ஆகாது போலயே.. இனி எப்படி பிருத்வியை நெருங்குவது என்று சப்னா யோசித்தாள்...

ஆனால் அவளுக்கு தெரியுமா..?? இவள் ஒன்றும் செய்யாமலே பிருத்வியும் யுக்தாவும் பிரியப் போறாங்க... அதற்கு அந்த வரூனே ஒரு காரணமாக போகிறான் என்று... அந்த தருணத்தை இவளுக்கு சாதகமாக்கி கொள்வாளா..?? சப்னா.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.