(Reading time: 19 - 38 minutes)

வி………..ன……………யா……………………….” என கண்களில் வழியும் கண்ணீரோடு…

வெளியே ருணதியிடமிருந்து நதிகாவை வாங்கிக்கொண்ட காவேரி, நதிகாவை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்… இத்தனை நாள் அது தன்னுடைய ராஜாவின் மகள் என்ற எண்ணம் இருந்தது… இப்போது அது தன்னுடைய விசித்திராவின் மகள் என்ற எண்ணமும், அவள் வாழ்வு இனி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் வர, அவரின் மனதில் ஒரு வித அமைதி வந்திருந்தது…

பிரபு, விஜய், இருவரும் ருணதி, மகத்தினையே பார்ப்பது உணர்ந்து காவேரியிடம் சொல்ல, காவேரியோ, மகத்தின் நெற்றியில் முத்தமிட்டு “என் ராஜா…. போ…. உன் கிருஷ்ணா கிட்ட பேசு….” என சொல்ல, புன்னகையுடன் சரி என்றான் அவனும்…

பின்னர், பிரபு, விஜய், காவேரி என மூவரும், நதிகாவுடனும், துருவனுடனும், அங்கிருந்து அகல, அடுத்த வினாடியே ருணதி மகத்தின் தோளில் சாய்ந்திருந்தாள் அழுகையோடும், பெரும் உவகையோடும்…

“சகி…………..” என்ற அவளின் வார்த்தை மட்டும் ஓயவே இல்லை கொஞ்சமும்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“கிருஷ்ணா… என்னடா இது… அதான் நான் வந்துட்டேனே… இன்னும் ஏண்டா அழற?...” என அவன் சொல்ல, அவள் கேட்கவில்லை…

“கிருஷ்ணா… யாராச்சும் வந்துடப்போறாங்க…” என அவன் சொன்னதும், அவன் தோளிலிருந்து விலகி, அவனை நேராக பார்த்தவள்,

“யார் வந்தா என்ன?... நீங்க என் சகி…. என் சகி மட்டும் தான்… புரியுதா?...” என ஒற்றைப் புருவம் உயர்த்தி, ஒரு இடுப்பில் கை வைத்து கேட்க, அவன் சொக்கித்தான் போனான் அவளது செயலில்…

“சகி…. உங்க கிட்ட தான் கேட்குறேன்…” என அவள் அவனை அடித்து சொல்ல, தன்னுணர்வு பெற்றவன்,

“சொல்லுடா… “ எனவும், அவளுக்கு கோபம் வந்தது…

“என்ன சொல்லுடா… ஏன் நான் சொன்னது கேட்கலையா?... ஒகே… மறுபடியும் சொல்லுறேன்… நீங்க என் சகி… என்னோட சகி மட்டும் தான்… புரியுதா?...” என அவனின் நெற்றி மீது முட்டி அவள் கேட்க, அவன் தன் கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள அரும்பாடு பட்டான்…

“ஹ்ம்ம்……. கிருஷ்ணா……….” என்றவன் குரலே அவனின் நிலையை சொல்ல, “எல்லாரும் வெயிட் பண்ணுறாங்கடா… போகலாமா?.......” என கேட்க, இன்னமும் அவனது கரம் தன் மீது படவில்லை என்ற எண்ணம் அவள் மனதில் பதிய, அவனை நேராக பார்த்தாள்…

“சகி………………………….” என்றவள் குரல் அவள் அடுத்து எதையோ செய்யப் போகிறாள் என்று உணர்த்த, அவன் அவள் விழிகளைப் பார்த்தான்…

முழுவதும் தேக்கி வைத்திருந்த காதல், விழிகளின் வழி வழிய, அவன் அதில் நனைந்து கரைந்து காணாமல் போன தருணம், அவள் அவனை நெருங்க முற்பட,

“கிருஷ்ணா………….. ப்ளீஸ்டா…. போகலாம்டா…” என அவன் கெஞ்சாத குறையாக சொல்ல, வந்த சிரிப்பினை தன் உதட்டிற்குள்ளேயே மறைத்தவள்,

“போகலாமே…” என்றவள், “பட் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்….” என்று கூற,

அவன் என்ன அது என்று போல அவளைப் பார்த்தான்…

“பெரிசா ஒன்னுமில்லை… ஒரே ஒரு தடவை…………….” என அவள் இழுத்ததும்,

“கிருஷ்…………….ணா……………………………….. ப்ளீஸ்டா…………. மதர் தேடுவாங்க…….” என அவனும் மிகவும் கெஞ்சிக்கொண்டே சொல்ல, அவளுக்கும் மேலும் சிரிப்பு வந்தது…

இருந்தும், வெளிக்காட்டாமல், “அதுக்குத்தான் சொல்லுறேன்… சீக்கிரம் என் கண்டிஷனை நிறைவேத்திட்டு நாம போகலாம்… என்ன டீலா?...” என அவள் இலகுவாக கேட்க…

“ப்ளீஸ்டா….. போகலாமே இப்போ…” என்றான் அவனும் கெஞ்சலுடனே….

“சகி…. என்ன இது… நான் கேட்டதை கொடுங்க… அப்புறம் போகலாம்… யாரு வேண்டாம்னு சொன்னா?...” என கேட்க, அவன் திகைத்தான்…

கடைசியில், ஒரு முடிவுடன், “நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை… கல்யாணம் ஆகட்டும் நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்… இப்போ போகலாம்டா… வா….” என கெஞ்சி அவன் அழைக்க, அவனின் அருகே நெருக்கமாக வந்தவள்,

“அய்யோ…. என் செல்ல சகி… எதுக்குடா இப்படி இருக்குற?... இவ்வளவு நல்லவனா நீ?.... நீ இப்படி எல்லாம் இருக்குறதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு… ஆனா அதே சமயம் உன்னை டீஸ் பண்ணனும்னு ஆசையாவும் இருக்கு….” என அவனின் தோள் மீது இருகரம் வைத்து அவனது கழுத்தினை வளைத்து, அவனின் நெற்றியில் செல்லமாக முட்டி, அவனை கிறங்க வைத்தவள், அவன் தடுமாறி அசையாமல் நிற்பதைப் பார்த்து,

“ப்ளீஸ்… சகி…. என்னை தடுக்காதீங்க… ஒரே ஒரு தடவை… நீங்க தர வேண்டாம்… ஆனா நான் கொடுக்கணும்… என் சகிக்கு…  என் செல்ல சகிக்கு….” என்றவள் அவனை மெல்ல இதமாக அணைத்து, அவனின் நெற்றியில் அழுத்தமாக இதழால் ஒற்றி எடுத்தாள்….

மொத்தமாக அவன் அவள் வசமாக, அவள் சிரித்துக்கொண்டே அவனைப் பார்க்க, அவன் தன்னிலை மறந்து போயிருந்தான்… அவளின் காதல் அவனுக்குப் புரிந்தது… அதே நேரம் இன்னும் அவளை நெருங்க எந்த உரிமையும் தனக்கு வரவில்லை என்ற எண்ணமும் புரிய அவன் அவள் விழிகளைப் பார்த்தவாறு, மெல்ல அவளை அழைத்தான்…

“கிருஷ்ணா…. ஹ்ம்ம்…. உன் கண்டிஷன் நிறைவேறிட்டு தான… இப்போ போகலாமா?...” என்று கேட்க, அவள் முதலில் முறைத்துவிட்டு, பின்னர் சரி உங்களை அப்புறமா பார்த்துக்கறேன்… என்ற மிரட்டலோடு அவனுடன் நடந்து சென்றாள் அவன் கைகளை கோர்த்தபடி சிரித்துக்கொண்டே….

அவன் உருவிக்கொள்ள முனைந்த போதும், அவள் விட்டால் தானே அவனது விரல்களை…

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்…..

Episode # 35

Episode # 37

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.