இருவரும் சொல்ல கதவை நோக்கி சென்ற காமாட்சி,
“இருந்தாலும் ஒரு சாரி கேட்க சொல்லி இருக்கலாம் நந்து....” என்று துளசி சொல்வது காதில் விழ,
“துளசி கண்ணா.... ரேவதி பேசினதை கேட்டு நீ ஒரு முழி முழிச்ச பாரு, அந்த டைமுல கூட எனக்கு சிரிக்க தான் தோணிச்சு.... உன் கிட்ட இப்படி எல்லாம் பயங்கரமான மாமியாரா நடந்துக்க ஆசையா இருக்கு....! ஆனால் முடியலை.... ஏதோ என் ஆசையை ரேவதி நிறைவேத்தி வச்சுட்டா....” என்று சொல்லி விட்டு சென்றாள்.
“பார்த்தீயா, அவங்களுக்கு எவ்வளவு ஆகி போச்சுன்னு....”
“ஆன்ட்டியை விடு.... உன்னை தான் நான் திட்டனும்.... நீ தான் என்னென்னவோ சொல்லி தப்பா ரூமரை கிளப்பி விட்டிருக்க...”
...
This story is now available on Chillzee KiMo.
...p>
ஆபிஸ் கட்டிடத்தை சுற்றி அமைக்க பட்டிருந்த நடை பாதையில் மெல்ல நடந்தார்கள் இருவரும்....
“என்னமா வெயில் அடிக்குது....”
“ம்ம்ம்ம்....”
“இந்த பூ அழகா இருக்கு....”
நந்திதா பதில் சொல்லாமல் உதயை பார்த்தாள்....
உதயிடம் கீற்றாக சின்ன புன்னகை தோன்றியது....!