“அப்படி இல்ல அர்னவ்… நாலு பேர் பார்க்குற மாதிரி வெளியே நின்னு வீட்டு விஷயத்தை பேச வேண்டாமேன்னு தான்…”
சுதீப் இழுக்க,
“ஓஹோ… வீட்டு விஷயத்தை வெளியே நின்னு பேச தயங்குவீங்க… ஆனா வீட்டு மருமகளை நடுராத்திரியில ஊரே பார்க்க வெளியே அனுப்புவீங்க?... அப்படித்தான?...”
அர்னவ் பட்டென்று கேட்க சுதீப் அவன் கேட்பதில் இருந்த உண்மை அறிந்து மௌனமானான்…
அந்நேரம்,
“சுதீப்… என்னப்பா வாசலில் நின்னு பேசிட்டிருக்க?.. யாரு வந்திருக்கா?...” என்றபடி விசாலம் வர, அர்னவின் பார்வை விசாலத்தின் மேல் விழுந்தது…
வந்தவள் அர்னவினைப் பார்த்துவிட்டு,
“என்ன இந்த நேரத்துல வந்திருக்குது தம்பி?..” என சுதீப்பிடம் கேட்டுவிட்டு,
இவன் ஏன் இங்கே வந்தான் என்ற பாவனையில் அவள் பார்க்க, அர்னவிற்கு பற்றிக்கொண்டு வந்தது…
“வாங்கம்மா… மகாராணி… வாங்க… இந்த வீட்டுக்கு வர நேரம் காலம் எல்லாம் பார்த்துட்டு தான் வரணும் இல்ல?...”
அர்னவ் நக்கலாய் விசாலத்தைப் பார்த்து கேட்க,
“ராத்திரியில வந்திருக்கியே அதான் கேட்டேன் என்ன விஷயம்னு?...” என்றாள் அவள் சற்றே எரிச்சலாக…
“விஷயம் என்னன்னா கேட்குறீங்க?... நீங்க ராத்திரின்னும் பார்க்காம என் கூடப்பிறந்தவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புவீங்க… அதை தட்டி கேட்க நான் வந்தா நேரம் காலம் எல்லாம் உங்க கண்ணுக்கு படுது???... உங்களுக்கே இது ஓவரா இல்ல?...”
அர்னவ் பல்லைக்கடித்துக்கொண்டே கேட்க,
“தம்பி என்ன பேசுறன்னு தெரிஞ்சு பேசு….” என்றாள் விசாலம் வெடுக்கென…
“வேலைப் பார்க்க வந்த இடத்துல வேலையை மட்டும் பார்க்காம, தேவை இல்லாம நிறைய வேலையைப் பார்த்துட்டிருக்கீங்கன்னு நல்லா தெரிஞ்சு தான் பேசுறேன்….” என்றான் அர்னவ் அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டே…
“நான் என்ன வேலையைப் பார்க்கணும்னு நீ எனக்கு சொல்லிக்கொடுக்க வேண்டாம்….”
“அதே தான் நானும் சொல்லுறேன்… வீட்டு எஜமானியா உங்களை நீங்களே நினைச்சு செய்யுற வேலையை இதோட விட்டுட்டா உங்களுக்கு ரொம்பவே நல்லது… நானும் இனி உங்க வேலை எதுன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது…” என்றவன்,
“நான் சொல்லுறது சரிதான சுதீப்?...” எனக் கேட்க, சுதீப்பின் பார்வை விசாலத்தின் மேல் வெறுப்புடன் பதிந்தது…
“நான் இந்த வீட்டு வேலைக்காரியா தம்பி?... இந்த குடும்பத்துல ஒருத்தியா தான அம்மா என்னை நடத்தினாங்க… நீங்களும் நடத்துறீங்க… இவன் இப்போ எப்படி பேசுறான் பாருங்க தம்பி….” என அவள் மூக்கை உறிஞ்ச,
“அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு?... இது எங்க குடும்ப விஷயம்… நீங்க உங்க வேலையை மட்டும் பார்த்தீங்கன்னா நல்லா இருக்கும்….” என அந்த வேலை என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சுதீப் சொல்ல, அர்னவின் முகம் சற்றே மலர்ந்தது…
அதைக் கண்ட விசாலத்திற்கு ஆத்திரம் வர, விருவிருவென்று உள்ளே சென்றாள் வேகமாய்…
“அவங்களை இனி நான் பார்த்துக்குறேன்… நீங்க உள்ள வாங்க அர்னவ்… ப்ளீஸ்….” என சுதீப் கெஞ்ச, அதற்கும் மேல் அவனது வார்த்தையை அலட்சியம் செய்யாது உள்ளே வந்தான் அர்னவ்…
தொடரும்
{kunena_discuss:995}