(Reading time: 12 - 23 minutes)

திலீப்பும் சரயூவின் மீது தன் தாயைபோல் பாசமாக இருக்க, அதைப் பார்க்கையில் எல்லாம் விசாலத்திற்கு பற்றிக்கொண்டு வந்தது…

அதன் பின் சரயூவும் தாயாகிவிட, திலீப் அவளை பூப்போல் தாங்குவதைக் கண்ட விசாலத்திற்கு மனதே ஆறவில்லை…

திலீப்பின் மனதில் இருந்து சரயூவை கீழே இறக்கியே தீர வேண்டும் என்ற பழி உணர்ச்சி விசாலத்திற்கு நாளுக்கு நாள் மேலோங்கிக்கொண்டிருந்த வேளையில் தான் சரயூ பிரவசத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அறையின் வாசலில் தவிப்போடு நின்றுகொண்டிருந்த திலீப்பிடம்,

“பேஷண்ட் சீரியஸ் கண்டிஷனில் இருக்குறாங்க… சிசேரியன் செய்து தான் குழந்தையை வெளிய எடுக்கணும்… சீக்கிரம் இதுல ஒரு சைன் போடுங்க…” என நர்ஸ் வந்து சில பேப்பர்களை நீட்ட, ஆடிப்போனான் அவன்….

“போடுப்பா… யோசிக்காத… சரயூ நல்லபடியா குழந்தையைப் பெத்தெடுத்து வீட்டுக்கு வந்துடுவா….” என சண்முகம் அவனை தேற்றினார்…

சில மணி நேரம் கழித்து, “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு….” என திலீப்பின் கையில் குட்டி தேவதையை நர்ஸ் கொடுக்க, விசாலத்தின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பின் புன்னகை விரிந்தது…

தொடரும்

Episode # 27

Episode # 29

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.