(Reading time: 11 - 21 minutes)

வானியின் தவிப்பைப் புரிந்து கொள்பவனாக வந்து சேர்ந்தான் சஞ்சய்.  சஞ்சயை முதன்முறை பார்த்தபோதே, ‘நல்ல பையன்’ எனப் பெயர் எடுத்துவிட்டான்.  அடுத்த முறை பார்க்கும்போது, ‘இவனே மகளுக்கு பொருத்தமானவன்’ என அவரை முடிவே என்று அவரின் வாயாலேயே சொல்ல வைத்துவிட்டான் சஞ்சய்.

அன்று மாலை தன் விரலில் புதிதாக குடியேறியிருந்த அந்த மோதிரத்தை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.  அவளது மனம், ‘எப்படிம்மா?  இந்த பையனை எனக்கு செலக்ட் செய்தீங்க?  அப்படி இவனிடம் என்ன தெரிந்தது உங்களுக்கு?” அவனது பார்வையை நினைத்தாலே அவள் உடல் முழுவதும் பற்றி எரிந்தது.

மதியமே தங்களது பூர்வீக வீட்டிற்கு வந்த ப்ரியாவையும் அவளது குடும்பத்தாரையும் ஊராரும் அருளின் குடும்பமும் வரவேற்றனர்.  ப்ரியா சிறிது ஓய்வெடுக்க, சரியாக நிச்சயத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு சஞ்சயின் வீட்டினர் வந்து சேர்ந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சஞ்சய், அவன் தான் ப்ரியாவிற்காக பார்த்திருப்பவன்.  அந்த ஊரில் பல வருடங்களாக புகழ்பெற்ற நிறுவனம் அவர்களுடையது.  எங்கேயோ ப்ரியாவைப் பார்த்த சஞ்சய் அவளிடம் மயங்கிப்போனான்.  இதுவரை அவன் பார்த்த பெண்களில் இருந்து வேறுபட்டுத் தெரிந்தாள் ப்ரியா.  அவளைத் தன்னுடையவளாக்க எண்ணம் கொண்டவனுக்கு, அதன் வழி வகை புரியவில்லை.  ஆனால், ப்ரியாவைப் பற்றி விசாரிக்கையில் கைலாசநாதனைப் பற்றி அறிந்துகொண்டவனுக்கு, அவரை வளைப்பது எளிதாகவே இருந்தது.  அவரது மனதை மாற்றி தனக்கு சாதகமாக்கிக்கொண்டவனுக்கு பவானியை சமாளிப்பதற்குத் தான் பெரும்பாடாய் போய்விட்டது.

எப்படியோ, அவரையும் தனது நடிப்பை நம்பவைத்து இப்போது ஒரு வழியாக நினைத்ததை அடையப் போகிறான்.  தன் விருப்பம் கைகூடப்போவதில் தலைகால் புரியாமல் தான் போட்டுக்கொண்டிருக்கும் வேஷம் மறந்து ப்ரியாவை நோக்கி அவளை பார்வையாலேயே அளந்தான் சஞ்சய்.

சுதாரித்துக்கொண்டாள் ப்ரியா.  ஒருவரின் பார்வையைக் கொண்டே அவரை எடைபோடும் கலையை நன்கு அறிந்துவைத்திருந்தாள் ப்ரியா.  அதனால், அவளால் சஞ்சயிடம் ஏதோ சரியில்லை எனப் புரிந்து போனது.  அவனை அவன் அறியாமலேயே கூர்ந்து கவனிக்கலானாள்.  விரைவில் அவளது சந்தேகம் ஊர்ஜீதமாகியது.

அதிலிருந்து மேலும் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று தீவிரமானாள்.  அதன் விளைவாக அந்த விபரீதமான எண்ணம் அவள் மூளையில் பளிச்சிட்டது.  ஆனால், இதனை மறுத்து இவ்வாறு செய்ய வேண்டாமென்று கூறியது அவளது மனம்.  வழக்கம்போல, அதனை அடக்கி தன் திட்டத்தை செயல்படுத்த என்னென்ன செய்யவேண்டுமென்று யோசிக்கத் தொடங்கினாள் ப்ரியா.

மனம் இருக்கிறதே… அது உரைப்பது பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.  அதன்படி நடப்பவர்கள் என்றுமே பிறரால் மதிக்கும்படி நடப்பர்.  மனத்தின் குரலை அலட்சியப்படுத்துவதே பல பிரச்சினைகளுக்கு காரணமாகின்றன.  இங்கே ப்ரியா தன் மனதினை அலச்சியப்படுத்துவதால் என்னென்ன நிகழப்போகிறதோ?

ஃப்ரெண்ட்ஸ்…. இந்த பகுதியையும், கடந்த இரு பகுதிகளையும் சிறியதாக கொடுத்ததற்கு மன்னிக்கவும்.  நீண்ட அப்டேட் கொடுக்க வேண்டுமென்று விருப்பமிருந்தாகும், சில பல காரணங்களால் அளிக்க முடியவில்லை.  அடுத்த அப்டேட் பெரியதாக கொடுக்க முயன்றவரை முயற்சிக்கிறேன்.  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்…!!  தொடர்ந்து ஊக்கமளித்து வருவதற்கு நன்றி….

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:1075}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.