"என்ன செய்யலாம்? என்று கேள்விக் குறி யோடு பார்த்துக் கொண்டே குட்டி முயல் கேட்டது.
"இந்தப் பள்ளத்தில் அந்தக் காட்டானையை விழச் செய்யவேண்டும். அது மேலே ஏற முடியாமல் தத்தளிக்கும் போது எங்களை வீசி எறிந்தாயே இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்க வேண்டும் என்று சொல்லியது ஷான் நாட்டு முயல்.
"அது எப்படிப் பள்ளத்தில் வந்து விழும். பள்ளத்தைக் கண்டால் ஒதுங்கித்தானே போகும்'' என்று சொல்லியது இரங்கூன் முயல்.
"பள்ளம் இங்கே இருப்பது அதற்குத் தெரியக் கூடாது. ஆனால் அது இந்த வழியாக வரவேண்டும். கண்ணைத் திறந்து கொண்டே அது பள்ளத்தில் விழ வேண்டும்'' என்றது ஷான் முயல்.
"பாவம்! விழுந்து அடிபட்டால் அதற்கு உடம்பெல்லாம் வலிக்குமே!'' என்று இரக்கப் பட்டது இரங்கூன் முயல் .
நமக்கு வலிக்கிற மாதிரி அதற்கும் வலிக்க வேண்டும். அப்போது தான் அதற்குப் புத்தி வரும் என்று சினத்துடன் கூறியது ஷான் முயல்.
ஷான் நாட்டு முயலின் கருத்துப்படி இரண்டு முயல் குட்டிகளும் செயல்புரிந்தன.
பக்கத்துக் கரும்புத் தோட்டத்தில் வெட்டிக் கிடந்த கரும்புகளை ஒவ்வொன்றாகக் கௌவி இழுத்து வந்தன. பள்ளத்தில் குறுக்கில் இருபது கரும்புகளை வரிசையாக அடுக்கின. அதை இலை தழைகளால் மூடின.
பள்ளத்தின் எதிரில் கரும்புகளைக் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு