கொண்டு கீழே இறங்கியது. பிளிறிக் கொண்டு அங்கிருந்து ஓடியது.
காட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற யானை பிடிக்கும் வீரர்கள் திரும்பி வந்தார்கள்.
கயிறுகள் தூள் தூளாய் அறுந்து கிடப்பதையும் யானை தப்பியோடி விட்டதையும் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள்.
அவ்வளவு பலமான கட்டுக்களைக் குதறி எறிவது யானையால் முடியாது. ஏதோ தெய்வம் தான் வந்து இதைச் செய்திருக்க வேண்டும். அந்தத் தெய்வம் வனதேவதையாகக் கூட இருக்கலாம்.
வனதேவதைக்கு அன்பான யானையைத் தாங்கள் பிடித்தது அந்தத் தெய்வத்துக்குப் பிடிக்க வில்லை போலிருக்கிறது.
இந்தக் காட்டில் மேற்கொண்டு தங்கினால், தங்களுக்கு வனதேவதையால் ஏதாவது கேடு வரும் என்று அஞ்சி உடனே புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.
குட்டி முயலுக்கு அப்போதுதான் மன அமைதி ஏற்பட்டது.
------------