கொண்டான் தெனாலிராமன்.
தெனாலிராமன் தனி ஒருவனாக திருடர்களை பிடிக்க போவதாக சொன்னதைக் கேட்டு எல்லா அமைச்சர்களும் சிரித்தனர்.
மறுநாள் முதல் விஜயநகர சாம்ராஜ்யம் முழுவதும் மக்கள் ஒரே விஷயத்தை பற்றி தான் பேசிக் கொண்டார்கள்.
“பெரிய அதிசயமா இருக்கு! நாம எல்லோரும் திருட்டு போயிடுமோன்னு பயந்து நடுங்கிட்டு இருக்கோம். அந்த பெரிய நகைக் கடைக்காரன் என்னமோ அதிசய மந்திரத்தை கத்துக்கிட்டு வந்திருக்கானாம். அதை சொல்லிட்டு படுத்தா, பணப் பெட்டியை திறந்து வச்சுட்டே தூங்கலாமாம்!”
“இது மட்டும் உண்மையா இருந்தா நாமளும் அந்த மந்திரத்தை கத்துக்கிட்டு நம்ம சொத்தையும் காப்பாத்திக்கலாம்”
மக்கள் இப்படி தங்களுக்குள் பேசிக் கொள்வது திருடர்களின் காதிலும் விழுந்தது.
அன்று இரவும் படுக்கப் போகும் முன் அந்த பெரிய நகைக் கடைக்காரன், கைகூப்பி ஒரு மந்திரத்தை சொன்னான். பின் தன்னுடைய பெரிய பண பெட்டியை திறந்து வைத்து, தூங்கப் படுத்தான்.
அவன் குறட்டை விட்டு தூங்கும் வரை வெளியே காத்துக்கொண்டிருந்த இரண்டு திருடர்கள், பதுங்கி பதுங்கி அந்த இடத்திற்கு வந்தனர். பணப் பெட்டியில் இருந்த நகைகள், பணம் அனைத்தையும் மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டார்கள். பிறகு மெதுவாக பக்கத்து தெருவில் உள்ள முன்னாள் மந்திரி உடைய வீட்டினுள் நுழைந்தார்கள்.
நகைக்கடைக்காரர் வீட்டு கொள்ளை பற்றி கேள்வி பட்ட அரசருக்கு என்ன செய்வது என்று புரியவில்ல!