உதவியாளர் இரண்டு காவலர்களுடன் திரும்பினார்.
“என் காவலர்கள்? ராமா இதன் பொருள் என்ன?” அரசர் கோபத்துடன் கர்ஜித்தார்.
“அரசே, நீங்கள் எனக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்களோ. அதை இவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதாக நான் வாக்களித்து இருக்கிறேன். “
தான் அரண்மனை மற்றும் பார்வையாளர் மண்டபத்திற்குள் நுழைந்தது எப்படி என்று ராஜாவிடம் கூறினான் ராமன்.
நேர்மையற்ற காவலர்கள் மீது கோபம் கொண்ட மன்னர், ராமனின் புத்திசாலித்தனத்தால் மகிழ்ந்தார்!
“என் கட்டளைகளை மீறி லஞ்சமா கேட்கிறீர்கள்?” அவர் உதவியாளர்களிடம் திரும்பினார்.
“இவர்களுக்கு தலா 50 சவுக்கடி கொடுத்து, வேலையை விட்டு நீக்குங்கள்.”
பின் ராமனிடம்,
“இந்த தீயவர்களை அம்பலப்படுத்தியதற்கு உனக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்”
மன்னர் எப்போதும் போல் ராமனுக்கு பொற்காசுகள் வழங்கி கௌரவித்தார்!
பேராசை எப்போதும் பெருநஷ்டத்தில் கொண்டு போய் நிறுத்தும்!
------------