(Reading time: 5 - 9 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

அமைதியாக நின்றான்.

  

தெனாலிராமன் சிரித்துக்கொண்டே, “ நீ வைரங்களைப் பார்க்கவில்லையா? ஏன் முதல் சாட்சியைப் பார்க்கிறாய்?” என்று வினவினான்.

  

“இல்லை, இல்லை, நான் வைரங்களைப் பார்த்தேன்,”

  

“பிறகு என்ன? அவை என்ன நிறத்தில் இருந்தன?” என்று கேட்டான் தெனாலிராமன்.

  

“அவை சிவப்பு நிறத்தில் இருந்தன!”

  

தெனாலிராமன் மூன்றாவது சாட்சியை அழைத்து அவனிடம் கேட்டார்,

  

“ உன் எஜமானர் உன் முன்னிலையில் ராமுவுக்கு வைரங்கள் கொடுத்தார், இல்லையா? “

  

“ஆம்,” சற்றே தயக்கத்துடன் மூன்றாவது சாட்சி பதில் கூறினான்.

  

முதல் இரண்டு சாட்சிகள் பயத்தால் நடுங்கத் தொடங்கினர்.

  

தெனாலிராமன் “அந்த வைரங்களின் நிறம் என்ன?” என்று இவனிடமும் கேட்டான்.

  

மூன்றாவது சாட்சியும் இப்போது மிகவும் பயந்தான். கொஞ்சம் தைரியத்தை சேகரித்து, “அந்த வைரங்கள் வெள்ளை நிறம்” என்றான்.

  

திரைக்குப் பின்னால் இருந்து அரசர் கோபத்துடன் வெளியே வந்தார்.

  

அரசர் முன் பொய் சொன்ன எஜமானனுக்கும், மூன்று சாட்சிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.