அந்த வகுப்பு ஆசிரியை, “குழந்தை களின் மதிப்பெண் குறைந்ததற்குக் காரணம், இந்தச் சிட்டுக் குருவிகள் தான்!” என்று கூறினாள்.
அதனால், தலைமை ஆசிரியை, அம்மாச் சிட்டைக் கூப்பிட்டுக் கண்டித்தாள். ”அடுத்த மாதமும் இதே மாதிரி மதிப்பெண் குறைந் தால், இரண்டு சிட்டுக் குஞ்சுகளையும் பள்ளிக் கூடத்தை விட்டு நிறுத்தி விடுவேன்’ என்று திட்டமாகச் சொல்லி விட்டாள்.
அன்று மாலை, பள்ளி விட்டுத் திரும்பிய சிட்டுக் குஞ்சுகளுக்கு நல்ல திட்டுக் கிடைத்தது. அம்மாச் சிட்டு மிகச் சினத்தோடு பேசியது. ‘இனிமேல் விளையாட்டைக் குறைத் துக் கொள்கிறோம்” என்று அந்தச் சிட்டுக் குஞ்சுகள் உறுதியளித்தன.
ஒருவாரம் கழித்து ஒரு நாள் தலைமை யாசிரியை எங்கோ பேருந்தில் போய்வந்தாள். பேருந்தை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றாள். அப்போது, ஒரு முரடன் மிக விரைவாக எதிரில் நடந்து வந்தான். திடுதிப் பென்று, தலைமை ஆசிரியையின் கைப் பையைப் பறித்துக் கொண்டு ஓடினான்.
”திருடன் திருடன்” என்று தலைமை யாசிரியை கத்தினாள்.
உடனே கூட்டம் கூடியது. தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் அந்தத் திரு டனை விரட்டிக் கொண்டு ஓடினார்கள்.
ஒருவன் திருடனை நெருங்கிப் பிடிக்கப் போனான். அப்போது அந்தத் திருடன் ஒரு கத்தியை எடுத்து நீட்டவே, அவன் பயந்து நின்று விட்டான். திருடன் ஒடிக் கொண்டிருந்தான். ஒடியவர்கள் செய்வதறியாமல் நின்று விட்டனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன அந்த இளஞ் சிட்டுக்கள். விருட்டென்று பாய்ந்தன. இரண்டும் பறந்து சென்று திருடனின் முகத்தில் மாறி மாறிக் கொத்தின. அவன் அவற்றின் திடீர்த் தாக்குதலை எதிர்க்க முடியாது கீழே விழுந்தான். அவன் கையில் இருந்த கத்தி நழுவிப் போய்த் தொலைவில் விழுந்தது.