அதற்குள், சிறுமியின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் உந்தில் வந்த அந்தத் திருடர்களை அடித்து உதைத்து அனுப்பினார்கள்.
மறுநாள், பள்ளியில் அந்தச் சிறுமி நடந்த தைக் கூற எல்லாப் பிள்ளைகளும் சிட்டுக்களைப் பாராட்டினர்.
சிட்டுக்களும் இது போல் எல்லாருக்கும் நல்ல உதவிகளை அவ்வப்போது செய்து வந்தன.
பள்ளியில் விளையாடுவதையும், குறும்பு செய்வதையும் விட்டு விட்டன.
அந்த மாதத் தேர்வில் எல்லாக் குழந்தைகளும் நிறைய மதிப்பெண் வாங்கினார்கள்.
சிட்டுக் குருவிகளும் நனறாகத் தேர்வு எழுதி நிறைய மதிப்பெண் வாங்கின.
ஒவ்வொரு மாதமும் அவை மதிப்பெண் அறிக்கை கொண்டுவரும்போது மரத்தில் உள்ள எல்லாப் பறவைகளுக்கும் காட்டி அம்மாச் சிட்டு மகிழ்ச்சி கொள்ளும்.
”என் குஞ்சுகளைப் பெரிய மருத்துவர் ஆக்கப் போகிறேன்’ என்று அது அடிக்கடி சொல்லும்.
சிட்டுக்களும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் நல்ல கண்மணிளாக விளங்கின.
அந்தச் சிட்டுக்களைப் போல் சுறுசுறுப்பாகவும் பகைவருக்கு அஞ்சாத வீரமுள்ளவர்களாகவும் பாடத்தை ஒழுங்காகப் படிக்கும் பாப்பாக்களாகவும் நாம் இருப்போம்.
------------