நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
நாம் படித்தவை - 15 - என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில் – இந்துமதி
சைலஜாவும் சித்ராவும் நெருங்கிய தோழிகள். சித்ரா பணக்கார வீட்டை சேர்ந்தவள், சைலஜாவோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்.
சைலஜாவும் மதுவும் மனதார விரும்புகிறார்கள். அவர்களின் காதலை பற்றி சித்ராவிற்கும் நன்கு தெரியும்.
ஒரு நாள் பேச்சுவாக்கில் தான் மதுவுடன் மகாபலிபுரம் போக இருப்பதாக சொல்கிறாள் சைலஜா. தோழி மீது இருக்கும் அன்பில் மதுவை கண்ணை மூடி நம்பி விட வேண்டாம் என்று அறிவுரை வழங்குகிறாள் சித்ரா.
மதுவின் மீது நூறு சதவிகிதம் நம்பிக்கை வைத்திருக்கும் சைலஜா தோழியின் பேச்சை ஏற்க மறுக்கிறாள். அவளை கண்டிக்கும் சித்ரா, ஆண்கள் எப்போது வேண்டுமென்றாலும் தடம் மாறுவார்கள் என்று எச்சரிக்கிறாள்.
இப்படியே போகும் பேச்சு தோழிகள் நடுவே பந்தயத்தில் வந்து முடிகிறது.
தன்னால் எளிதாக மதுவை சைலஜா பக்கம் இருந்து இழுக்க முடியும் என சித்ரா சொல்ல, சைலஜா அதை மறுக்கிறாள்.
இறுதியில் இருவரும் அதையே பந்தயமாக ஏற்றுக் கொள்கிறார்கள். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே மதுவை திருமணம் செய்துக் கொள்வது என்ற முடிவிற்கும் வருகிறார்கள்.
அமைதியான குணமுடைய சைலஜா ஸ்மார்ட்டான சித்ராவுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் தவிக்கிறாள். சித்ரா மதுவின் அம்மாவிடம் பேசி அவரின் அன்பை பெறுகிறாள். மதுவிடமும் சாமர்த்தியமாக பேசி அவன் மனதில் சைலஜா குறித்த குழப்பங்களை ஏற்படுத்துகிறாள்.
மெல்ல மெல்ல தன்னுடைய உலகம் கை நழுவி செல்வதை போல உணர்கிறாள் சைலஜா. சித்ராவின் நடவடிக்கைகளை புரிந்துக் கொண்டாலும், அதை தடுக்கவோ, எதிர்த்து நிற்கவோ முடியாமல் திணறுகிறாள். தான் மதுவை தன் தோழியிடம் இழக்க போகிறோம் என்ற முடிவிற்கே வருகிறாள்.
*************************** Spoiler ahead ***********************************
கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்
விஷயங்கள் கை மீறி போக, மதுவின் அம்மா, தன் மகனின் காதல் பற்றி தெரிந்திருந்தாலும் அவனுக்கு ஏற்றவள் சித்ரா தான் எனும் முடிவிற்கு வருகிறார். அதை சைலஜாவிடம் நேரடியாக சொல்லவும் செய்கிறார். மதுவின் மனம் திடமாக தன் பக்கம் இருக்கிறது என்பதை உணராமல் அவனின் அம்மாவின் பேச்சினால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்கிறாள் சைலஜா. ஆனால் சித்ரா மற்றும் மதுவின் முயற்சியால் காப்பாற்றபடுகிறாள். தான் பந்தயத்தில் தோற்றுப் போய் விட்டதாக தோழியிடம் ஏற்றுக் கொள்கிறாள் சித்ரா. மதுவின் அம்மாவும் முன்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, சைலஜாவையே தன் மருமகளாக ஏற்றுக் கொள்கிறார்.*************************** End of Spoiler ***********************************
சில கதைகள் படிக்கும் போது, அது கற்பனை என்பது தெரிந்திருந்தாலும், படிக்கும் போது மனம் உருகும், அடுத்து என்ன ஆகுமோ என்று பதைபதைக்கும். அப்படி ஒரு கதை தான் இந்த கதை.
தோழிகள் இருவரும் முக்கிய வாழ்க்கை பிரச்சனையை வைத்து பந்தயம் கட்டுகிறார்களே என்று யோசிக்க விடாமல் தொடரும் நிகழ்வுகள் நம்மை கதையுடன் கட்டி போட்டு விடுகிறது.
கதையை இப்படி முடித்திருக்காவிட்டால் கட்டாயம் கதாசிரியரின் மீது தீராத கோபம் வந்திருக்கும் என்று சொல்லலாம் 😊😊.
வித்தியாசமான ஒரு காதல் & குடும்ப கதை.
நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:703}