(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 68. நீயே தானடா….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

வண்ணக்கோலமாய் நானிருந்தாலும்

அதில் இருக்கும் ஆரம்பப்புள்ளி நீயே….

கண்ணைக்கவரும் ஓவியமாய் நானிருந்தாலும்

அதில் தெரியும் உயிரோட்டம் நீயே…

எண்ணக்கூடாரமாய் நானிருந்தாலும்

அதில் திண்ணமாய் அமர்ந்திருப்பது நீயே…

சலசலக்கும் நதியாய் நானிருந்தாலும்

அதில் ஓடும் நீரோட்டம் நீயே…

துள்ளித்திரியும் மானாய் நானிருந்தாலும்

அதில் காணப்படும் புள்ளிகள் நீயே…

இமைகாணும் கனவாய் நானிருந்தாலும்

அதில் பார்த்திடும் உருவம் நீயே…

அசைந்தாடும் காற்றாய் நானிருந்தாலும்

அதில் உணரும் தென்றல் நீயே…

ஆர்ப்பரிக்கும் கடலாய் நானிருந்தாலும்

அதில் தவழும் அலைகள் நீயே…

இரவுநேர நிலவாக நானிருந்தாலும்

அதில் உலவிடும் குளிர்ச்சி நீயே…

ஸ்வரங்கள் ஏழாக நானிருந்தாலும்’

அதில் எழுந்திடும் இசை நீயே…

அர்த்தமுள்ள கவிதையாய் நானிருந்தாலும்

அதில் நிறைந்திருக்கும் எழுத்து நீயே…

மயக்கும் மாலையாக நானிருந்தாலும்

அதில் சூழும் இதம் நீயே…

நனைத்திடும் சாரலாய் நானிருந்தாலும்

அதில் தென்படும் ஈரப்பதம் நீயே…

வானத்து மங்கையாக நானிருந்தாலும்

அதில் உதித்திடும் சூரியனும் நீயே…

நேசம்கொண்ட நெஞ்சமாய் நானிருந்தாலும்

அதில் துடித்திடும் இதயமும் நீயேடா…

எத்தனை விதமாய் நானிருந்தாலும்

அதில் அத்தனையிலும் என்காதல் நீயே தானடா !!!…

பூ மலரும்

Ilam poovai nenjil 67

Ilam poovai nenjil 69

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.