அவளின் டைரியில் - மீரா ராம்
26. எது நிரந்தரம் இதில்???
யாரிடமும் எதுவும் சொல்லாமல் மனதினுள்
உன்னையும் உன் நியாபகங்களையும் அமிழ்த்தினேன்…
இன்று ஏனோ உன்னிடமே அடிக்கடி வரத்துடித்தேன்…
சந்தர்ப்பம், சூழ்நிலை, ஏன் நானே எனக்கு
விரோதியாய் தோன்றினேனே…. ஏன்???
எட்டாத, கிட்டாத, காணாத உயரத்தில் நீ…
புத்தி இதை அறிந்து கொண்டது…
மனது ஏன் புரிந்து கொள்ளாமல் உன்னை
என்னுள் நுழைத்து உன்னைத் தேடி வர சொல்கிறது…
உன்னை நினைத்து தினமும் உருகுகிறேன்…
உன்னிடம் பேச துடித்து அதிகமாய் ஏங்குகிறேன்…
நிஜம் புரிந்து கண்ணீரில் கரைகிறேன்…
டைரியில் உன்னை மறக்காமல் எழுதுகிறேன்…
உன் பேச்சு வரும்போது வாயிருந்தும் ஊமையாகிறேன்…
இந்நேரத்தில் வைரமுத்து அவர்களின் கவிதை
நினைவிற்கு வருகிறது…
“காதலித்துப் பார்…
சொர்க்கமோ… நரகமோ…
இரண்டில் ஒன்று தெரிந்து விடும்…”
ஆனால் எனக்கு ஏன் தெரியவில்லை…
உன்னைப் பற்றி எண்ணினான்
சொர்க்கமாக தோன்றுகிறது..
உன் புறக்கணிப்பும் பாராமுகமும்
கண்முன் வருகையில்
நரகமாய் மாறுகிறது…
எனில் எது நிரந்தரம் இதில்???...
{kunena_discuss:784}