கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 31 - கட்டுப்படுத்திடவும் முடிந்திடுமோ???... - மீரா ராம்
உன்னை மட்டுமே நெஞ்சுக்குள் பொத்தி வைத்திருக்கிறேன்…
உன்னை மட்டுமே சிந்தைக்குள் உலவவிட்டு ரசிக்கிறேன்…
உன்னை மட்டுமே கண்ணுக்குள் பார்த்து பூரிக்கிறேன்…
உன்னில் மட்டுமே தொலைந்து போகவும் விரும்பி
நான் மெதுமெதுவாக கரைந்து கொண்டிருக்கையில்
ஈரேழு நாட்கள் பெரும் தவம் போல
உன் அருகில் இல்லாது நகர்ந்து செல்ல….
சகித்துக்கொண்டேன் நொடிப்பொழுதும் உன்னையே எண்ணிக்கொண்டு…
அணுக்ஷணமும் உன் பெயரையே நான் உச்சரித்தது
அந்த ஸ்ரீராமனுக்கு மட்டுமல்ல உனக்கும் கேட்டதோ?..
எதிர்பார்க்காத நேரத்தில் நான் ஏமாந்து போய்க்கொண்டிருக்கும்
எழுதப்படாத சட்டத்தை மாற்ற வந்ததா உன் அழைப்பு?...
கண்கள் மட்டுமல்ல இதயமும் நிறைந்துவிட்டதடா என் செல்லக்கண்ணா…
அழுகையிலும் சிரிப்பு வந்தது உன் குரல் கேட்டு….
உன் ஒற்றை அழைப்பில் என்னை முழுவதும்
உன்னிடத்தில் நான் தொலைத்துவிட்டேனடா…
உற்சாகம் என்னுள் ஊற்று போல் வெளிப்பட
மொத்தத்தையும் உன்னில் கொட்டி தீர்த்திட்டேன்
அழுகை என்ற காதல் மூலம்…
அழுவதில் கூட சுகமுண்டோ…
இன்று அறிந்துகொண்டேன் அந்த மாயத்தை…
ஆம்… உனக்காக என் விழிகள் சிந்திய நீர்
என் மனம் உன்னை தேடியதற்கு சாட்சியாய் வந்ததோ?..
கள்ளன் நீ…. பேச்சை திசைமாற்றி எனை சிரிக்க வைத்து
ஓர் நொடியில் என் விழிநீர் துடைத்து விட்டுவிட்டாயே
காற்றுக்கும் நோகாமல்….
என் அழகு கண்ணா… நான் ரசித்திடும் என் செல்ல தோழா….
உன்னை கொஞ்சிட துடிக்கும் மனதினை இனியும்
என்னால் கட்டுப்படுத்திடவும் முடிந்திடுமோ???…. என் ராஜா!!!!
பூ மலரும்……….
{kunena_discuss:1088}