கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.???… - மீரா ராம்
பரந்து விரிந்த வானத்தில் சின்னதாய் படர்ந்து
மிதந்து கொண்டிருக்கும் வெள்ளை மேகமென நகர்ந்து
கலைந்து போக துணிவில்லாது நிற்கிறேன் உன்னுடன் கலந்து….
அசையும் கொடியில்லை என மனம் உரைத்தும்
திசையும் தடையில்லை என உன் வழி தொடர்ந்தும்
வசையும் பொருட்படுத்தாது, பிரண்டிடாமல் உள்ளது என் இசையும்…
உருவாய் உன்னை கற்பனையில் வடித்திட,
வருவாய் என் உள்ளக்கதவுகளும் திறந்திட,
தருவாய் எண்ணங்களும் நான் கருவாய் சுமந்திட…
ஆசைகள் மனதில் ஊஞ்சல் கட்டி விளையாடுகையில்
ஓசைகள் இல்லாது அதனை அமிழ்த்திடுகையில்
பசைகள் போல் ஒட்டிக்கொள்கிறாய் நீயும் நெஞ்சமதில்…
கேசம் கலைத்து மகிழ்ந்திட விரும்பியும்
நேசம் ஒன்றே போதுமென எண்ணியும்
தசையும் பிரண்டிட மாட்டேன் என மறுத்து
கசையும் மறந்திடுவதும், நான் இசைந்து கொடுப்பதில் தானோ?...
கனவுகள் கனவாகவே இருந்திடுவதும்
நனவுகள் மௌனமாகவே நகர்ந்திடுவதும்
இரவு வந்து போகும் நட்சத்திரத்திற்கு தெரியுமோ தெரியாதோ
வரவு வைத்து செல்லும் என் உள்ளத்திற்கு வெட்ட வெளிச்சமே…
நடித்து சிரித்து மகிழும் உதடுகள் அறியும்
வடித்து நான் துளிர்க்கும் கண்ணீர்த்துளிகள்… ஆம்
தவித்து உன்னை நான் நினைப்பதும்
குவித்து உன்னை மனதில் நிறைப்பதும் போதாதென
இதயத்திலே உன்னை தொட்டில் கட்டி தூங்கவிட்டு
உதயத்திலே உன்னை தேடுவதும் காதல் தானோ???... என் ராஜா!!!
பூ மலரும்……….
{kunena_discuss:1088}