(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 33 - சந்தேகமும் உண்டோடா உனக்கு.???… - மீரா ராம்

Ilam poovai nenjil

நேசத்தின் மொத்த வடிவமான என் சிநேகிதா….

அன்பெனும் வாசம் கொடுத்து என்னை

உன்னிடத்தில் சேர்த்துக்கொண்ட என் மித்ரா…

தேறுதல் இல்லாது தனியே இருந்தவளுக்கு

ஆறுதல் அளித்து உனக்குள் எடுத்துக்கொண்ட என் கிருஷ்ணா…

அபயம் தீர வஞ்சி இவளுக்கு தக்க நேரத்தில்

உபயம் அளித்த என் வாசுதேவா….

யார் உன்னை கைவிட்ட போதும்

நான் உன்னை கைவிடமாட்டேன் என்று

எனக்கு நம்பிக்கை அளித்து கரையேற்றிய என் கோவிந்தா….

எத்தனை பெயர்கள் உனக்கு….

எத்தனை அவதாரங்கள் உனக்கு….

அளவும் இல்லை…

கணக்கும் இல்லை…

எண்ணிலடங்கா பெயர்கள் உனக்கு நான் சூட்டி மகிழ்ந்தாலும்

அது அனைத்திற்கும் பொருத்தமானவன் தான் நீ….

வரையறையில்லா அவதாரங்கள் நீ எனக்காக எடுத்திருக்கும் நேரத்திலும்

உன் எண்ணத்தில் மூழ்கி போகிட மறக்கவில்லை இவள்….

மாயவா… கேசவா… எனை ஆளும் மாதவா….

என்ன பெயர் சொல்லி உன்னை அழைப்பேன்?...

அனைத்து பெயருக்கும் உரியவனாய் நீ இருக்கையில்….

என் செல்லக் கண்ணா… பிரியமான மன்னா….

நீ என்னில் எங்கிருக்கிறாய்?...

நான் உன்னை பார்த்து ரசித்திடும் கண்களிலா?...

உன் குரலை கேட்டு மகிழ்ந்திடும் செவிகளிலா?...

உன் பெயரை உச்சரித்து முடித்திடும் இதழ்களிலா?...

உன் முகமே நினைவாக இருக்கும் எண்ணத்திலா?...

உன் சுவாசமே குருதியாக ஓடும் உடலிலா?...

பதில் சொல்லிடுவாயா என் அழகா???…

அனைத்துமாக உன்னை நான் பார்த்து, கேட்டு,

ரசித்து, நுகர்ந்து, நினைத்து, உணர்ந்திட்டாலும்

என்றுமே நீ இப்பாவையின்

நெஞ்சத்தில் நீங்காமல் ஒலிக்கும்

இதயத்துடிப்பும் என்பதில் சந்தேகமும் உண்டோடா உனக்கு?... என் ராஜா!!!!

பூ மலரும்……….

Ilam poovai nenjil 32

Ilam poovai nenjil 34

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.