(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 35 - நான் கொண்ட காதல் தானோ?...?? - மீரா ராம்

Ilam poovai nenjil

விழி திறந்து நான் பார்க்கையில்

வேறேங்கோ பார்த்து என்னை தவிக்க வைத்து

நான் சிணுங்கி கோபம் கொண்டு

தரையை வெறிக்கையில்

என்னை பார்த்து சிந்திடுவாய் நீயும்

உன் குறும்பு புன்னகையினை…

சட்டென நானும் ஏதோ ஓர் உந்துதலில்

உன்னை பார்த்திட்டால், பட்டென நீயும்

என்னை பார்ப்பதை தவிர்த்து செல்கையில்

அப்படியே உன்னை நாலு அடி

அடிக்கத் தோன்றும் என்றா நினைக்கிறாய்?...

ஹ்ம்ம்… ஹூம்….

என்னை ஏனடா பார்க்க மறுக்கிறாய்?...

எதற்காக இந்த கண்ணாமூச்சி விளையாட்டு?...

உன் விழிப்பார்வைக்கு ஏங்கி தவித்து

நான் காத்திருப்பது உனக்கு புரியவில்லையா?...

ஓர் முறை பாரடா என்னை…. பார்த்துவிடடா கண்ணா...

என மனதினுள்ளேயே உன் பெயரை

மெல்ல உச்சரித்து ரசித்திடவே தோன்றிடும்

என் நிலையினையும் உன்னிடத்தில்

உள்ளம் திறந்து கூறிவிட்டால்

நீ என்ன சொல்வாய் என தெரியுமா?...

லேசாக என் தலையில் கைவைத்து

சற்றே உன் முகம் சுருக்கி விரித்து

இதழ் குவித்து லூசு என்பாய் சிரிப்புடன்…

அந்த ஓர் செய்கை போதுமடா கண்ணா…

என் ஜென்ம சாபல்யம் கூட அகன்றிடும் அந்நொடியே…

ஆம் உன் செல்ல அழைப்பு ஒன்று போதும்

என் எந்த நிலையையும் மாற்றிட….

உனது ஓர் அழைப்பில் பைத்தியமாகிறேனே…. எனில்

இது கூட உன் மேல் நான் கொண்ட காதல் தானோ?... என் ராஜா!!!….

பூ மலரும்……….

Ilam poovai nenjil 34

Ilam poovai nenjil 36

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.