ஒற்றையடிப் பாதை பயணமிது...
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
பலபிரிவு கொண்ட வழி இங்கே...
துணையாய் யாரும் வருவதில்லை...
முன்னே பின்னே வந்தாலும்
பாதியில் தொலைந்து போய்விடுவார்...
உனக்கான வழியிலே
உறுதுணை தேடாதே...
உயிர் ஒன்றை தவிர
உடன் வருவது ஏதுமில்லை...
இடை வந்து இணைவோருக்கு
இன்னல் நீ செய்திடாதே..
இடையூறு செய்வோரை
இன்முகமாய் வென்றிடு...
உயிர் அறுக்கும் துரோகிகளுக்காய்
உன்னை நீ வருத்தாதே...
முள்ளோ கல்லோ உன் வழியில்
முயற்சி ஒன்றை இழந்திடாதே...
திரும்பி செல்ல வழியில்லை
துவண்டு நீ நின்றிடாதே...
எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றிலும்
உன் பாதச்சுவடு படியும்படி
உறுதியாய் ஊன்றிடு...
உலகமே உன் காலுக்கடியில்....