(Reading time: 6 - 11 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 15 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 16 சந்துருவும் சாவித்திரியும்

ன்று காலை தபால்காரன் கொண்டுவந்து கொடுத்த "அழைப்பிதழ்', ராஜமையர் வீட்டில் மேஜை மீது கிடந்தது. கையில் நூலும், ஊசியும் வைத்துக்கொண்டு சீதா சவுக்கம் பின்னிக்கொண்டிருந்தாள்.. நொடிக்கொருதரம் அவள் கண்கள் அழைப்பிதழை நோக்கி மலர்ந்தன. 'ஸ்ரீமதி சரஸ்வதி வாய்ப் பாட்டும், வீணையும்' என்று தங்க நிற எழுத்துக்களில் அச்சடித்திருக்கும் வார்த்தைகளைத் திருப்பித் திருப்பிப் படித்தாள் சீதா. சாவித்திரி மட்டும் ஒற்றுமையுடன் அவர்களிடையே இருந்தால் இன்று சீதா அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுத் துள்ளிக் குதித்திருப்பாள். கட்டாயம் சென்று ஸரஸ்வதியின் இன்னிசையைக் கேட்க வேண்டும் என்று வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். காலையில் கடிதம் வந்ததும் காரியாலயத்துக்குப் போவதற்கு முன்பு ராஜமையர் அதை அலட்சியத்துடன் பார்த்து விட்டு, மேஜைமீது 'பொத்' தென்று வீசி எறிந்தார். அவருக்கு மாப்பிள்ளையிடம் ஏற்பட்டிருந்த கோபத்தை ஒருவாறு புரிந்து கொண்டாள் சீதா. அவருக்குப் பிரத்தியேகமாக ரகுபதி எழுதி இருந்த கடிதத்தைப் படித்தபோது அவர் முகம் 'கடுகடு' வென்று மாறியது.

"இந்தத் திறப்பு விழாவுக்குத் தாங்கள் வந்திருந்து அவசியம் நடத்திவைக்க வேண்டும். அங்கு எல்லோரும் சௌக்கியம் என்று நம்புகிறேன்."

சாமர்த்தியமாக எழுதப்பட்ட கடிதம் என்றுதான் அவர் நினைத்தார்: சாவித்திரியைப் பற்றி விசாரித்து ஒன்றும் எழுத வில்லை. அவள் எப்பொழுது வரப்போகிறாள் என்றும் கேட்க வில்லை. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் பெண்ணைப் பெற்றவரிடமே பெண்ணைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பிரஸ்தாபியாமல் அவளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை விளக்காமல்--வருமாறு அழைத்திருப்பான் என்று அவர் உள்ளத்தில் அனல் கனன்றது:

பயந்து கொண்டே மங்களம் கணவனின் அருகில் வந்து என்று விசாரித்தாள்.

அது என்ன கடிதம்? யார் எழுதி இருக்கிறார்கள்?” என்று விசாரித்தாள்.

"உன் அழகான மாப்பிள்ளை எழுதியிருக்கிறான்! சங்கீத மண்டபம் கட்டித் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறானாம். நான் வந்து அவனுடன் இருந்து நடத்திவைக்க வேண்டுமாம். உடனே ஓட வேண்டியது தான் பாக்கி!" என்று அலட்சியமாகக் கூறிவிட்டு காரியாலயத்துக்குப் புறப்பட்டார்.

"சாவித்திரியை அழைத்து வரும்படி எழுதி இருக்கிறதா?"" என்று கவலையுடன் விசாரித்தாள் மங்களம்.

"அட சீ. . . . நீ ஒன்று!" சாவித்திரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்' என்று கேட்கிற

2 comments

  • Intha Kathai oru nalla padipinai. Whenever, a husband praises another woman and steps-down his own wife or when a wife compares her husband and praises another man, the marriage becomes strained. Classic reason of why wife doesn’t like her own MIL and husbands never likes his father-in-law (A girl’s 1st hero is always her Dad and a man always compares his wife’s skill with his mother’s efficiency)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.