ஆழ்ந்திருக்கிறது என்பதை உன் முகமே காட்டி விடுகிறதே! வயசிலும் அனுபவத்திலும் பெரியவனாகிய என்னை நீ ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாய்...."
மேல் மூச்சு வாங்க சுவாமிநாதன் பேசி முடிப்பதற்குள் ராதா தேம்பித் தேம்பி அழுதாள். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ”அவரிடமிருந்து கடிதமே வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை " என்றாள்.
கணவனின் நன்மையில் அவன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் காண்பிக்க வேண்டிய அக்கறையில் ராதா தவறி விட்டாள் என்பது சுவாமிநாதனுக்கு விளங்கியது. 'இந்தப் பெண் எதற்காக அவசரப்பட்டு விவாகம் செய்து கொண்டாள்?' என்னும் அளவுக்கு அவர் மனம் வருந்தியது.தன் துயரை எல்லாம் அவள் கண்ணீராக வடிக்கும் வரையில் சுவாமிநாதன் ஒன்றும் பேசவில்லை. ராதா ஒருவழியாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமாதானம் அடைந்தவுடன், "ஏனம்மா! மூர்த்தியின் விலாசம் தெரியாமல் நீ எங்கே கிளம்புவதாக இருந் தாய்?" என்று கேட்டார்.
ராதா தன் எதிரில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்தாள். அவள் எங்கே போகிறாள்? அப்படித்தான் மூர்த்தியின் காரியாலயம் மூலமாக அவள் இருப்பிடத்தை அறிந்து கொண்டாலும், ”நீ ஏன் வந்தாய்? உன்னை யார் வரச் சொன்னது?" என்று அவன் கேட்டால், மறுபடியும் ராதா இந்த இடத்துக்குத் தானே வர வேண்டும்? ஒன்றையும் யோசியாமல் அவசரத்தில் செய்த முடிவைப் போல அவள் பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டது அவளுக்கே வியப்பை அளித்தது.
அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவே, சுவாமிநாதனுக்கு அவளுடைய மன நிலை புரிந்தது. பிறந்த வீட்டிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை யில் தான் சுதந்திரம் உண்டு. அங்கே எவ்வளவு இன்ப மாகவும், சுதந்திரமாகவும், அவர்களுடைய பொழுது கழிந்தாலும், அதை அவர்கள் விரும்புவதில்லை. கணவனின் ஆதரவில், அவன் அன்பில் தங்ளை அர்ப்பணிக்கவே பெண்களின் உள்ளங்கள் ஆசைப்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்டார்.
ராதா பெட்டியைத் திறந்து மறுபடியும் ஒவ்வொரு துணியாக எடுத்துப் பீரோவுக்குள் வைத்தாள். படிப்படியாக அவள் மனம் நிதானமடைய ஆரம்பித்தது. கீழே டாக்டர் ஸ்ரீதரன், வெளியே போயிருந்தவர் வீடு திரும்பி விட்டார் என்பதற்கு அடையாளமாக அவருடைய காரின் ஒலி கேட்டது.
--------------
தொடரும்...