”அவள்.... வந்து... அவள்... பாலுவை பர்ஸனலாக அழைக்க வந்திருக்கிறாள்!" என்று கூறி விட்டு ஓட்டமாக மாடிப்படிகளில் ஏறிச் சென்றுவிட்டாள் சுமதி.
கன்னம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்கள் மருள ஜெயஸ்ரீ தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள் .டாக்டர் ஸ்ரீதரன் ஆசையுடன் தம் மகளை அணைத்தவாறு காருக்குள் சென்று உட்கார்ந்தார்.
அவர் மனம் காதலைப் பற்றி தீவிரமாக நினைக்க ஆரம்பித்தது. இப்படித்தான் ஒரு நாள் ராதாவும் - மூர்த்தியைக் காதலிப்பதாகச் சொன்னாள். அந்தக் காதல் எப்பொழுது. எந்த இடத்தில், எந்தச் சமயத்தில் உதயமாகிறது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடி யாது போலும் என்று நகைத்தார் அவர். 'தகாத இடத் தில் ஒரு ஜோடிக்கு முடிச்சுப்போட்டு வேடிக்கை பார்ப் பதில் பிரும்மாவுக்கு ஆசை. தகுந்த இடத்தில் காதலை வளர்த்துப் பிரித்து வைப்பதில் அவனுக்கு ஓர் ஆனந்தம். காதல் பாதையிலே வெற்றி கண்டவர்கள் அபூர்வம். ரோமியோவும். ஜுலியட்டும். சகுந்தலையும் துஷ்யந்த னும், லைலாவும் கயஸும் அந்தப் பாதையின் கரடுமுரடு களை அனுபவித்து வெற்றியையும் கண்டவர்கள். ராதா முதலில் வெற்றியைக் காணவில்லை. தோல்வியைத்தான் கண்டிருக்கிறாள். ஜெயஸ்ரீ எப்படியோ?' என்று நினைத் துக் கொண்டே காரைச் செலுத்திக் கொண்டு வந்தார்.
பேசாமல் திகைத்துப் போய் அருகில் உட்கார்ந்திருக்கும் தமது மகளைப் பார்த்து, 'அம்மா! ஜெயஸ்ரீ! பாலுவை உனக்குப் பிடித்திருக்கிறதா? அவன் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருஷங்கள் பாக்கி இருக்கின் றதே. அதன் பிறகு உங்கள் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று இருக்கிறேன்" என்றார்.
ஜெயஸ்ரீ பதில் ஒன்றும் கூறவில்லை. மிகுந்த நாணத் துடன் தன் புடவைத் தலைப்பை முறுக்கியபடி உட்கார்ந் திருந்தாள்.
இப்படித்தான் ஸ்ரீதரனின் மனைவி பத்மா முதலில் அவருடன் பேசவும் தயங்கித் தலை குனிந்து நின்றிருந் தாள் . அவர் மனம் பல வருஷங்களுக்கு முன்பு அவருடன் பழகிய மனைவியை மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது. அந்த நிகழ்ச்சி, அந்த நாள், யாவுமே அவர் மனத்துள் பதிந்து போன அழியா ஓவியமாகத் திகழ்ந்தது.
--------------
தொடரும்...