குவித்தபோது, அவன், “குழந்தை பிறந்த பிறகு கல்யாணம்னு சொல்றேன் பாருங்க” என்று சிரித்தான்.
சுயம்பு, தனக்கு முன்னால் வைத்த, பக்கடா மசால் வடைப் பொட்டலங்களை மற்றவர்களுக்குப் பரிமாறப் போனான். இதற்குள், பிள்ளைத்தாய்ச்சி, அதைப் பிடுங்கிக் கொண்டு, எல்லோருக்கும் பாகப் பிரிவினை செய்தாள். சுயம்பு அவற்றைத் தின்றுவிட்டு அவசர அவசரமாய் எழுந்தான். அவன் ஒயிலாக நின்ற தோரணையும், கண்களைச் சிமிட்டிய விதமும், குரலின் இதமும் அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. ஆனாலும் அவனைச் சூதுவாதற்ற ‘சுபாவி’யாக எடுத்துக் கொண்டார்கள். தாய்க்காரிதான் இந்திராவுக்கு இவன் பொருத்தமாய் இருக்க மாட்டானோ என்று அப்போது ஆசைப்பட்டதை இப்போது மறு பரிசீலனை செய்தாள்.
சுயம்புவை, எதிர்கால மச்சான்காரனே பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பினான். அவன் பஸ்ஸில் ஏறிய விதம், மாப்பிள்ளைக்காரனுக்கு என்னவோ போலிருந்தது. யோசித்தான்.
-----------------
தொடரும்...