(Reading time: 6 - 12 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

பட்டப்பா அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். மேஜை மீது வைத்திருந்த பூவையும், பொட்டலங்களையும் எடுத்து வந்து, இந்தா ! இதை வாங்கிக்கோ. பூ வைச்சுக்கோ. நீ தலை நெறய பூ வச்சுண்டா ஜம்முன்னு இருக்கு. நாம ரெண்டு பேருமாவே டிபன் சாப்பிடலாம். இன்னிக்கி புதுப்படம் ரிலீஸ். உன் அண்ணாவும் மன்னியும் போயிருப்பான்னுதான் தைரியமா வந்திருக்கேன்-"

  

நர்மதா பரிதாபமாக அவனைப்பார்த்தாள். ஓட்டிப் போயிருக்கும் கன்னங்கள். சோகை வெளுப்பாக ஓர் அசட்டு வெளுப்பு.பூனைக்கண்கள். மழ மழவென்ற முகம். வளைந்த மூக்கு. செம்பட்டை பறக்கும் கிராப்பு வேற. ஆண்மையின் கம்பீரம் லவ லேசமும் இல்லாமல் ஆணாகப் பிறந்து விட்டிருந் தான் அவன். தொள தொளவென்ற ஷர்ட்டும், தெருவைப் பெருக்குகிற வேஷ்டியும் கட்டியிருந்தான்.

  

அவன் அவளுக்கு அருகில் நெருங்கி வந்து நின்றான். மேலும் சென்டின் மணம் குபீரென்றுவீசியது. அவள் நகர்ந்து நின்றாள். எதுக்கு இப்படி நாட்டுப் புறத்தான் மாதிரி செண்டை ஊத்திண்டு வரேள்? சாராய நெடியே தேவலாம் போல இருக்கு -',

  

"அப்ப நாளைலேருந்து குடிச்சிட்டு வாங்கறயா?"

  

''உக்கும்... இதுக் கொண்னும் கொறச்சல் இல்லை-"

  

அவனுக்கு ஆசை அடித்துக்கொண்டது. அவளைத்தொட் டுப்பார்க்க வேண்டும். அந்த நீண்ட பின்னலை வருட வேண்டும். கொழு கொழு வென்றிருக்கும் கன்னங்களை வருட வேண்டும்.

  

அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டி ருந்தாள். கோவிலிலிருந்து நாதஸ்வர ஒலி கேட்டது

  

"கடவுளே! கடவுளே! என்னை ஏமாத்தினது போதும் இதை இந்தஜடத்தை இங்கேயிருந்து போகச்சொல்லேன்- அவள் திடீசென்று உரத்தக்குரலில், 'வந்தாச்சு,பாத்தாச்சு போங்க இங்கேயிருந்து என்றாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.