குறிப்பிட்டார்.
“இந்தப் பெண்தான் மொலஸ்ட் ஆன பொண்ணு இல்லியா? இவங்கள மெடிகல் டெஸ்டுக்கு அனுப்பணும்.”
இப்போது முத்து குமுறினான்.
“இது லாக்கப் இல்ல சார். காலேஜ்.”
“நீ யாருடா கொம்பன்... யார்கிட்ட பேசறோம்னு நினைத்துப் பேசு... இன்ஸ்பெக்டர்... இவனுக்கு ஒரு டோசியர் போடு...”
“எஸ் சார்... இம்மீடியட்லி சார்...”
முத்துவின் வாயை மூர்த்தி மூடிக்கொண்டான். சுயம்பு எதுவுமே நடக்காதது போல் அப்படியே நின்றான். பிரமிளா தனக்காக அழுதாள். சுயம்புவிற்காக அழுதாள். ஒரு முரட்டுப் பயலை - ஒரு தந்திரக்காரனை முன்பின் யோசிக்காமல் அவனே கதியென்று ஆகிவிட்டோமே என்று முப்பெரும் அழுகையாய் அழுதாள். அந்த அழுகையால் கோபப்பட்ட டி.எஸ்.பி. சுயம்புவை முறைத்தார். விவகாரத்தைக் கைவிட விரும்பிய பதிவாளர், இப்போது அது கையை விட்டே போகும் நிலைக்கு வந்ததை உணர்ந்து ஒரு தாற்காலிகத் தீர்ப்பு வழங்கினார்.
“சுயம்பு இஸ் சஸ்பெண்டட் ரைட் நெள. நைட்ல வைஸ்-சான்சலர கன்சல்ட் செய்து. மேற்கொண்டு என்ன ஆக்ஷன் எடுக்கணுமோ அதை எடுப்போம்!”
பொன்முகன், ஏற்கெனவே கட்சி மூலம் பரிச்சயப்பட்ட டி.எஸ்.பி.யிடம் கிசுகிசுத்துவிட்டு முழங்கினான்.
“இவனை போலீஸ்ல ஒப்படையுங்க சார். இவனுக்குப் பின்னால ஒரு பெரிய கிரிமினல் கேங்கே இருக்குது... போலீஸாலதான் இதைக் கண்டுபிடிக்க முடியும்.”
“நீ நினைக்கறதைவிட பலமான ஆக்ஷன் கூட நிர்வாகம் எடுக்கலாம். நத்திங் இஸ் ரூல்ட்