"எது?"
"இதப் பாரு!"
புருவங்கள் நெருங்கிக் கடுமையை வெளியிடுகின்றன.
"சுடர்ப் பொறிகள்" என்ற தலைப்பு.
முற்போக்குக் குழுவினர் என்று ஒரு முகவரி, மக்கள் முற்போக்கு இலக்கியப் பொறிகள் சிதறுமிடமாம்.
'அன்புள்ள மிஸ் யமுனா,
எங்கள் வட்டத்தில் தாங்கள் ஒரு நாள் வந்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். தாங்கள் ஒப்புதல் தெரிவித்தால் நேரில் வந்து காண்கிறோம்.
அமைப்பாளர்,
ரமேஷ்'
"யாரிது?"
"எனக்குத் தெரியவில்லையே பெரியப்பா?"
"உனக்குத்தான் நேரடியா எழுதியிருக்கிறார்கள். இந்த சுடர்ப்பொறி, தீப்பந்தமெல்லாம் கத்தி கபடாக்காரங்க கூட்டம். உன்னைத் தெரிஞ்சு தைரியமா எழுதியிருக்கிறானே? இந்த ரமேஷை உனக்குத் தெரியுமா? கத்தி கபடாக் கட்சிக்காரனுக சகவாசம் உண்டா உங்கம்மாவுக்கு?"