"இடியும் மின்னலும் நின்னபாடில்லை. மறுபடியும் மழை வரும் போலிருக்கு" என்றான் மூர்த்தி.
சத்திரத்துத் தாழ்வாரத்தின் ஒரு மூலையில் ஏற்கனவே இடம் பிடித்து வைத்திருந்தாள் மஞ்சு. அங்கேதான் சமையல் சாப்பாடு படுக்கை எல்லாம்.
மஞ்சு அடுப்பு பற்ற வைத்து சப்பாத்தி தயாரித்தாள்.
”சப்பாத்தி பிடிக்குமா உனக்கு?" மூர்த்தியைக் கேட்டாள்.
"இல்லே, நான் ஆனந்தா லாட்ஜுக்குப் போறேன்."
"ஏன் நான் செய்யற சப்பாத்தி பிடிக்காதா?"
"உன்னைப் பிடிச்சிருக்கு!"
சிரித்தாள். அவள் அவனிடம் இந்த வார்த்தையை எதிர் பார்க்கவில்லை.
"போயிட்டு சீக்கிரம் வந்துடுவே இல்ல?"
"உடனே… இனிமே உன்கூடத்தான்."
"ஏன் ! வேதம் படிக்கப் போறதில்லையா?"
"நீ என்னைத் தொட்டு காப்பாத்தினதிலேர்ந்து என் மனசே சரியில்லே. பாடசாலையிலும் அமைதி இல்லாமப் போயிடுத்து. புத்தி வேதத்தில் லயிக்கலே. சரியோ தப்போ, துணிஞ்சு வந்துட்டேன்."
“உனக்கும் உன் அப்பாவுக்கும் ஆட்சேபணை இல்லேன்னா நானும்
உங்களோடு சேர்ந்து கழைக்கூத்து ஆடத் தயார். எனக்கு வித்தையெல்லாம் கத்துக்